முரளி வாங்கிய கடனை மறக்காமல் திருப்பி செலுத்தியுள்ளார் மனைவி ஷோபா.
Thirupur Subramaniam About Murali Wife : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி உயிரிழந்தார்.
அவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் முரளி பலரிடம் கடன் வாங்கி அதைத் திருப்பி செலுத்துவதற்கு முன்பாகவே மரணமடைந்துள்ளார்.
முரளி இறந்த கையோடு அவரது மனைவி செய்த செயல்.. பலநாள் ரகசியத்தை உடைத்த பைனான்சியர்.!!
அவர் தான் வாங்கிய கடன் விவரங்களை ஒரு டைரியில் எழுதி வைத்துள்ளார். இதனைப் பார்த்த அவருடைய மனைவி ஷோபா திருப்பூர் சுப்ரமணியன் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய 17 லட்சம் ரூபாயை மறக்காமல் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். நடிகர் முரளி இறந்தபின் அவர் கொடுத்த பத்திரங்களை கிழித்துப் போட்டு விட்டேன். அவர்களிடம் கடன் திருப்பி தருமாறு கூட கேட்கவில்லை.
அப்படி இருக்கையில் ஒரு நாள் திடீரென முரளியின் மனைவி ஷோபா தனக்கு போன் செய்து வீட்டிற்கு வரச்சொன்னார். வீட்டிற்கு சென்றதும் ரூபாய் 17 லட்சம் பணத்தை என்னிடம் கொடுத்தார்.
நான் உங்களிடம் பணம் கேட்கவே இல்லை என கூறினேன். என்னுடைய கணவர் ஒரே கடனாளியாக செல்லக் கூடாது என நான் விரும்புகிறேன் என கூறி பணத்தை கொடுத்தார்.
என் மகன் அதர்வாவை ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக் கூறினார். அதர்வாவை ஆசீர்வாதம் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன் என தெரிவித்துள்ளார்.
ஷோபாவின் இந்தச் செயல் தன்னை மிகவும் நெகிழ வைப்பதாக திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .