
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய் பீம் படம் இயக்குனருடன் இடையே உள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது குறித்து தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெய் பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி அக்டோபர் நான்காம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.