Tasmac Collection in Ganesh Chaturthi : நேற்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது.
ஆனாலும் மதுக்கடைகள் வழக்கம் போல செயல்பட்டது. விநாயகர் சதுர்த்தி திருநாளான நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூபாய் 250 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னையில் ரூபாய் 50.65 கோடிக்கும் திருச்சியில் ரூபாய் 51.27 கோடிக்கும், மதுரையில் ரூபாய் 52.45 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சேலத்தில் ரூபாய் 49.3 கோடிக்கும் கோயம்புத்தூரில் ரூபாய் 46.58 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் வழக்கத்தைவிட மது விற்பனை ஜோராக நடந்து உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.