
Rain : தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களில் பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில், வளிமண்டலத்தில் ஒரு சுழற்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர், மகாபலிபுரம், சென்னை தரமணி, கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
மேலும், பருவமழை தற்போது தான் தொடங்கி உள்ளது . எனவே படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும் மேலும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்” இவ்வாறு தெரிவித்தார்.