Tamilnadu CM Edappadi Pazhanisamy Helps to Telungana
தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக தெலுங்கானா மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து தெலுங்கானாவுக்கு உதவிக்கரம் நீட்ட பட்டு வருகிறது.
ஆனால் இதுவரை எந்த மாநில முதலமைச்சரும் தெலுங்கானா மாநிலத்துக்கு உதவுவதாக அறிவிக்காத நிலையில் முதல் ஆளாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெலுங்கானா மாநிலத்திற்கு ரூபாய் 10 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
தெலங்கானாவுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.