Tamil Nadu Around 5.5 Lakh School Student Joined
தமிழக பள்ளிகளில் ஜோராக நடக்கும் மாணவர் சேர்க்கை.. இதுவரை அரசு பள்ளிகளில் மட்டும் எவ்வளவு பேர் சேர்ந்துள்ளனர் தெரியுமா??
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக தற்போது பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது.
மேலும் தமிழகத்திலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை சமீபத்தில் தொடங்கியது.
மாணவர் சேர்க்கை தொடங்கியதையடுத்து இதுவரை தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் 5.5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்திருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளில் சேர்ந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் புத்தகங்கள் மற்றும் பள்ளி Bag உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.