பிரபல இயக்குனரிடம் ஒன் லைன் கதையை கேட்டு ஓகே சொல்லியுள்ளார் சூர்யா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இறுதியாக வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் சிறுத்தை சிவா ஆக இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அது மட்டுமில்லாமல் அறிவு இயக்கத்தில் உருவாக இருந்து தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ள அருவா படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில் நடிகர் சூர்யா லிங்குசாமி இயக்கத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் கூட்டணியில் வெளியான அஞ்சான் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து லிங்குசாமி சூர்யாவிற்கு ஒரு கதையின் ஒன் லைன் கூற அது சூர்யாவுக்கு பிடித்து போய் உள்ளது.

முழு கதையையும் சொல்லுங்கள் என சூர்யா சொல்ல லிங்குசாமி கதையை கூறிய பிறகு அது சூர்யாவிற்கு பிடித்திருந்தால் இந்த கூட்டணி இணைய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.