ஊடகப் பயணத்திற்கு இடைவேளை.. சுந்தரி சீரியல் கேப்ரில்லாவின் பதிவு..!
சுந்தரி சீரியல் கேப்ரில்லா லேட்டஸ்ட் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

sundri serial gabriella latest post update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலுக்கான தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா.
இறுதிக்கட்டத்தை நோக்கி இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கடைசி ஷூட்டிங் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகே கேபிரில்லா கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு அதில் நன்றி சென்னை மீண்டும் அன்போடு பிறகு சந்திக்கிறேன் என்று பதிவிட்டு பிரேக் ஃபார் மை மீடியா ஜெர்னி என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.
View this post on Instagram