என் வாழ்க்கையில் குஷ்பு இல்லையென்றால் இவர்களுக்குத்தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன் என சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என அன்புக திறமைகளை கொண்ட ஒருவராக வலம் வருகிறார் சுந்தர் சி.
நடிகை குஷ்பூ காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் சுந்தர் சி அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகை குறித்து பேசி உள்ளார்.
தன்னுடைய வாழ்க்கையில் ஒரு வேலை குஷ்பு வரவில்லை என்றால் நான் நடிகை சௌந்தர்யாவிடம் தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன். நல்ல நடிகை, நல்ல பெண்மணி. அவரைப் போல் ஒருவரை பார்ப்பது அரிது என பேசி உள்ளார்.
விஜயகாந்த், ரஜினிகாந்த் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த சௌந்தர்யா விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.