குல்லா அணிந்து கொண்டிருப்பதற்கான காரணத்தை செய்தியாளர்களிடம் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது
மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வரும் 14ஆம் தேதி திரைக்கு வரை இருக்கிறது. இதனால் படக்குழுவுடன் இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பல இடங்களில் கலந்துகொண்டு வருகிறார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் தலையில் குலாவுடன் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலவிதமான கேள்விகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன் எப்போதும் குல்லாவுடன் சுற்றுவதற்கான காரணத்தை கூறியிருக்கிறார். அதில் அவர், அவரது அடுத்த படமான SK 21 படத்திற்கான கெட்டப்பில் இருப்பதாகவும், அதை வெளியில் காட்ட கூடாது என படக்குழு கண்டிஷன் போட்டதால் தான் எப்போதும் குல்லாவுடன் இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். மேலும் எவ்வளவு வெயில் அடித்தாலும் அதனுடன் தான் சுத்த வேண்டியதாக உள்ளது என்று நகைச்சுவையுடனும் கூறி இருக்கிறார். இதனால் அவரது ஹேர் ஸ்டைலை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். எஸ் கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் மிலிட்டரி மேனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.