ரோகிணியை இழுத்து தள்ளி உள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் வைத்து ‌ நலங்கு வைத்து தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி நடக்கிறது. 

இன்னொரு பக்கம் முத்துவை குடிக்க வைக்க முயற்சி செய்யும் வேலை நடக்க அண்ணாமலை முத்துவை காணாததால் ஷாக் ஆகிறார். மீனாவும் முத்து இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

ரோகினி விஜயாவை நினைத்து பயத்தில் இருக்க முத்து இல்லாததை பார்த்து வித்யா முத்துவை குடிக்க கூட்டிட்டு போய்ட்டாரு போல, என்று சொன்னதும் ரோகினிக்கு முகத்தில் சந்தோஷம் பொங்குகிறது. ஆனால் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்டாக ரோகிணி அருகே வரும் விஜயா உங்க அப்பா வருவாரா இல்லையா என்று கேட்க போன் பண்ணிட்டு தான் இருக்கேன் போன் போகல என்று கூறுகிறார். 

என்ன என்ன லூசுன்னு நினைச்சுட்டு இருக்கியா? வரமாட்டார்னா வரமாட்டார் என்று சொல்லி தொலைய வேண்டியது தானே? ஸ்ருதியோட அம்மாகிடட வேற உங்க அப்பா வருவாருனு சொல்லி வச்சிருக்கேன். அவங்க வேற கேட்டுக்கிட்டே இருக்காங்க என்று கோபப்படுகிறார்.

பிறகு மீனா , அண்ணாமலை, பரசு என மூவரும் முத்துவை தேடுகின்றனர். மீனா கீழ இறங்கி வந்து பார்க்க முத்து கையில் சரக்குடன் இருக்க எதிரில் இருப்பவர் என்ன பாஷை நான் ஆறு ஏழு கட்டிங் போட்டுட்டேன் நீ இன்னும் ஒரு வாய் கூட குடிக்கல என்று கேட்க ஒரு குடிகாரன் இன்னொரு குடிகாரனை குடிக்க கூப்பிட்டால் நான் வரலன்னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்லக்கூடாது அதனாலதான் வந்தேன் நீங்க குடிச்சிட்டீங்களே உங்களுக்கு போதை ஆகிவிட்டதுல சந்தோஷம். 

நான் என் பொண்டாட்டிகிட்ட என்னால எந்தப் பிரச்சினையும் வராதுன்னு சொல்லி இருக்கேன் அதனால குடிக்க மாட்டேன் என்று சொல்ல மீனா இதைக் கேட்டு சந்தோஷப்படுத்துகிறார். பிறகு முத்துவை மேலே கூட்டிச்செல்ல அண்ணாமலை பங்ஷன் முடிஞ்சிடுச்சு வா உள்ள போலாம் என்று கூட்டுச் செல்கிறார். 

அடுத்து விஜயா ரோகினியை இழுத்து வந்து இப்ப எங்க அப்பா கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு வா என்று சொல்ல ஆண்ட்டி அவர் எங்கே இருக்கிறார் என்று கேட்க அவர் வரல நீ இப்பயாவது உனக்கு தெரியுதா என கோபப்படுகிறார். 

பிறகு அண்ணாமலை எதுக்கு இந்த பொண்ணு திட்டிட்டு இருக்க அந்த பொண்ணு அவங்க அப்பா வரலைன்னு கவலையில் இருக்கும் என்று சொல்ல இப்போதைக்கு நீங்கதான் எனக்கு அப்பா அம்மா என்று ஆசிர்வாதம் வாங்கி அழுவது போல டிராமா போடுகிறார். 

பிறகு வித்யா தனியாக கூட்டிச் சென்று அதான் தனியா வந்துட்டியே இன்னும் எதுக்கு அழுது டிராமா பண்ணிட்டு இருக்க என்று கேட்க ரோகினி எப்படி எல்லாம் பேசுறாங்க பாருடி என்று கேட்கிறார். இனிமே மனோஜ் என் பேச்சை மட்டுமே கேக்குற மாதிரி பண்ணனும் என்று சொல்ல தனி குடுத்தனம் போ என்று கூப்பிடுகிறார் வித்யா. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.