Sirakadikka Aasai Episode Update 25.07.23
Sirakadikka Aasai Episode Update 25.07.23

ரோகினியை பிஏ படுக்கைக்கு அழைக்க விஜயாவுக்கு முத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மனோஜ் வாக்கிங் ஸ்டிக் வாங்கி வந்து விஜயாவுக்கு கொடுத்த இத புடிச்சு நடந்து பிராக்டிஸ் பண்ணி கல்யாணத்துக்கு வந்துடுங்க என்று சொல்ல முத்து வீல் சார் ஒன்னு வாங்கிட்டு அதுல வச்சு தள்ளிகிட்டே போ என்று நக்கல் அடிக்கிறார். விஜயா வாக்கிங் ஸ்டிக் வைத்து நடக்க முயற்சி செய்தும் நடக்க முடியாமல் தடுமாற அப்படினா கல்யாணத்தை நிறுத்திடலாம் அம்மாவுக்கு கால் சரியானதும் கல்யாணத்தை வச்சுக்கலாம் என சொல்ல மனோஜ் அதெல்லாம் முடியாது என பதறுகிறார்.

அதன் பிறகு மீனா அவங்கள பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு கால் வலி குணமாக ஏதாவது வைத்தியம் சொல்லுங்க பாட்டி என்று கேட்க அவர் ஒரு கசாயத்தை பற்றி சொல்லி முத்துவை நாட்டுமருந்து கடையில் சில மருந்துகளை வாங்கி வர சொல்கிறார். பிறகு முத்து மருந்து வாங்கி வந்து கொடுக்க மீனா கசாயம் போட்டு எடுத்து வர மனோஜ் அது என்ன என்று கேட்கிறார். மீனா டம்ளர் என்னென்ன கலர் அடிக்க மனோஜ் அது தெரியுது அதுக்குள்ள என்ன என்று கேள்வி கேட்கிறார்.

பிறகு எல்லோரும் ஒன்று கூடி விஜயாவை கசாயத்தை குடிக்க சொல்ல விஜயா இவ போட்ட கசாயமா என்னத்த கலந்தாலோ என்று சொல்லி எனக்கு அதெல்லாம் வேண்டாம் என அடம் பிடிக்கிறார். பிறகு முத்து அண்ணாமலை ரவி ஆகியோர் விஜயாவை வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டு வாயில் கசாயத்தை ஊற்றி விடுகின்றனர்.

என்னத்த ஊத்துனிங்க பாய் எல்லாம் கசக்குது என விஜயா புலம்ப இது பயங்கரமான மருந்து வழி சரியாகிடும் ஆனா ஆறு மாசத்துக்கு படுத்த படுக்க தான் மனதுக்கு கல்யாணத்தை இப்போதைக்கு நிறுத்திடலாம் ஒரு வருஷம் கழிச்சி கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று சொல்ல விஜயா பாத்தியா உன் கல்யாணத்தையே நிறுத்திட்டாங்க இதுக்கு தான் வேணா வேணான்னு சொன்னேன் என விஜய்யா பதற அண்ணாமலை அவன் சும்மா சொல்றான் என்று கூறுகிறார்.

பிறகு பாட்டி முத்து தான் உனக்காக மருந்து வாங்கிட்டு வந்து கொடுத்தான் மீனா அதை கசாயம் போட்டு எடுத்து வந்து கொடுத்திருக்கா அவங்களுடைய நல்ல மனச புரிஞ்சுக்கோ படுத்து நல்லா தூங்கி ரெஸ்ட் எடு நாளைக்கு துள்ளி ஓடுவ என்று பாட்டி சொல்கிறார்.

மறுபக்கம் ரோகினி பியூட்டி பார்லர் கிளம்ப அப்போது அந்த பிஏ போன் செய்து உன்ன பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சு என்று சொல்ல ரோகிணி என்ன தெரியும்? வாங்குன அடி எல்லாம் மறந்துட்டியா என்று கேள்வி கேட்கிறார்.

நான் எதையும் மறக்கல எல்லாம் ஞாபகம் இருக்கு கல்யாணி என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். நான் இப்போ உன் ஊர்ல தான் இருக்கேன் உனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான் அவன் பேரு க்ரிஷ் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்க ரோகிணி இப்பதான் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகுது அதை கெடுத்துடாத என கெஞ்சுகிறார். நான் இதை கேக் எடுக்க போறேன் எனக்கு வேண்டியது கிடைச்சா நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன் என்று சொல்ல ரோகிணி உனக்கு என்னதான் வேண்டும் என கேள்வி கேட்க நீதான் வேண்டும் என சொல்கிறார்.

உன் மேல எனக்கு அவ்வளவு ஆசை அவ்வளவு வெறி உன்ன அடஞ்சுட்டா எனக்கு வேற எதுவும் வேண்டாம் நீ யார வேணா கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு என சொல்ல வித்யா டேய் பொறுக்கி என கோபப்பட்டு பேச ரோஷினி நீ அமைதியா இரு என சொல்லி பிஏவிடம் சரி நான் வரேன் என சொல்கிறார்.

பிறகு அந்த பிஏ லாஜிக் வர அங்கு ஒரு பெண்மணி முகத்தை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்க ரோகிணி என நினைத்து வந்துட்டியா உன்னை மிரட்டி வர வைக்க வேண்டியதுதான் போயிடுச்சு என்ன பண்றது எனக்கு உன் மேல அவ்வளவு ஆசை, அந்த ஆசை தீர்ந்துவிட்டது என்றால் உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் என்று சொல்லி பூவை வைக்க கிட்ட வர பிறகு என் மனைவி எனக்கு தெரிஞ்சு அதிர்ச்சி அடைகிறார். அவருடைய பையனும் அங்கே இருக்க பிஏ அதிர்ச்சடைந்து நிற்க இந்த பெண்மணி நீ எல்லாம் ஒரு ஆம்பளையா என தொடப்பத்தை எடுத்து அடி வெளுக்கிறார்.

இனிமே என் முகத்திலேயே முழிக்காத என அவர் அங்கிருந்து பையனை கூட்டிக்கொண்டு கிளம்ப ரோகினி என்ட்ரி கொடுத்து நீ கூப்பிட்டதும் நான் வந்துடுவேன்னு நினைச்சியா நான் இருப்பேன் என்கிட்ட நெருங்குன பொசிக்கிடுவேன் என டயலாக் பேசுகிறார். மேலும் அங்கிருந்த பெண்மணியிடம் தொடப்பக்கட்டையை வாங்கி முகத்தில் வீசி எறிந்து விட்டு கிளம்புகிறார்.

அதோடு இல்லாமல் ரோகினி அந்த பி ஏ வின் மேடமிடம் விஷயத்தை சொல்ல அவர் இனி உனக்கு இங்க வேலை இல்லை என சொல்லி துரத்தி விடுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.