பயங்கர கோபத்தில் முத்து சொன்ன வார்த்தையால் அதிர்ச்சி அடைந்துள்ளார் மீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து காரை அப்படி பார்த்தது என் உடம்பில் இருந்து இதயத்தையே பிரிச்சு எடுத்த மாதிரி இருந்துச்சு என மீனாவிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் என்னை அடிக்கும்போது நீ எதுக்கு குறுக்க வந்த உன் மேல அடி விழுந்திருந்தா என்ன பண்ணி இருப்ப என்று கேட்க உங்களை அடிக்கும் போது பாத்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும் என சொல்ல முத்து ஃபீல் செய்கிறார்.

அதன் பிறகு என் கார் இந்த நிலைமைக்கு ஆளாக காரணமானவன் மட்டும் என் கையில கிடைச்சா சும்மா விடமாட்டேன் நீ மயான கொள்ளை பார்த்து இருக்கியா என்று கேட்க மீனா இல்லை என்று சொல்ல அப்படியே கையை முறுக்கி குடலை உருவி எடுத்துடுவேன் என்று சொல்ல மீனா பயப்படுகிறார்.

சரி எதுக்கு இவ்வளவு கோபப்படுறீங்க படுத்து தூங்குங்க காலையில சவாரிக்கு போகணும் என்று சொல்லி சமாதானப்படுத்தி முத்துவை படுக்க வைக்கிறார். மறுநாள் காலையில் சவாரிக்கு போக வேண்டும் என சீக்கிரம் எழுந்து கொள்ளும் முத்து மீனாவை எழுப்பி தெரு பெருக்கி கோலம் போடு அதெல்லாம் பண்ண பிறகு தான் அப்பா வெளியே போகணும்னு சொல்லி இருக்காரு என்று சொல்லி மீனாவை அழைத்துச் சென்று முத்துவே தண்ணீர் தெளித்து கோலம் போட்டு மீனாவிடம் போயிட்டு வரேன் நீ போய் காபி போட்டு குடிச்சிட்டு நல்லா தூங்கு என சொல்லி கிளம்புகிறார். இதைப் பார்த்த அண்ணாமலை நீங்க வாழ்க்கையில நல்லா இருப்பீங்க என வாழ்த்துகிறார்.

அதனைத் தொடர்ந்து மீனா ரவியை சந்தித்து உங்க அண்ணனுக்கு அந்த கந்துவட்டிக்காரர் தான் காரை ச்சீஸ் பண்ண காரணம் என்ற விஷயம் தெரிய வேண்டாம் என்று சொல்ல ரவி ஏன் அண்ணி என்று கேட்க அவருக்கு தெரிந்தா கொலையே பண்ணிடுவாரு, அந்த அளவுக்கு கோபத்தில் இருக்காரு என்று சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து ரவியுடன் சேர்ந்து ஸ்ருதியைச் சென்று பார்த்து நன்றி சொல்ல கிளம்புகிறார் மீனா. இருவரும் டப்பிங் ஸ்டுடியோ சென்று ஸ்ருதியை சந்தித்து பேச மீனா நன்றி சொல்ல என்னால் முடிந்த சின்ன உதவி செய்தேன் அவ்வளவுதான் என்று ஸ்ருதி கூறுகிறார். பிறகு டப்பிங் எல்லாம் இங்கதான் பேசுவாங்களா என்று மீனா கேட்க ஆமா நீங்க பாக்கறீங்களா என்று சொல்லி உள்ளே அழைத்துச் செல்ல அப்போது டப்பிங் பேச வர வேண்டிய பெண் வராததால் ஸ்ருதி மீனாவை பேச சொல்ல மீனா அதெல்லாம் வேண்டாம் எனக்கு பயமா இருக்கு என்று சொல்லியும் ஸ்ருதி மீனாவை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.