ரோகிணி ரூமுக்கு வந்த கிருஷ், முத்து,மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

Web Ads

ரோகினி ரூமுக்கு க்ரிஷ் வர, முத்து,மீனா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளனர்.

SiragadikkaAasai Serial Today Episode Update 13-08-25
SiragadikkaAasai Serial Today Episode Update 13-08-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ஸ்கூல்ல போட்டோ ஏதாவது கொடுத்திருப்பார்கள் என்று சொல்ல முத்து நல்ல ஐடியா தான் என்று சொல்லி அண்ணாமலையை கூப்பிடுகிறார் உடனே அவர் வந்தவுடன் ஏதாவது கிரிஷ் பாட்டி பத்தி தெரிஞ்சுதா என்று கேட்க அதெல்லாம் எதுவும் தெரியலப்பா என்று சொல்லுகிறார் அது எப்படி தெரியும் அவங்க தான் வேணும்னு விட்டு விட்டு போயிருக்காங்களே அவங்க கண்ணு முன்னாடி வந்து நிப்பாங்களா என்று விஜயா சொல்லுகிறார்.உடனே ரவி ச
ஸ்ருதி என அனைவரும் வந்துவிட முத்து இல்லப்பா இப்போ ஸ்கூல்ல கிருஷ் சேர்த்து விடும்போது அவங்களோட அம்மா போட்டோ போன் நம்பரை ஏதாவது கிடைக்கவில்லை என்று சொல்ல அண்ணாமலையும் நல்ல ஐடியான விசாரிச்சு சொல்றேன் என சொல்லுகிறார். உடனே ரவி போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாமா என்று கேட்க ரோகினி அதிர்ச்சி அடைகிறார் உடனே போலீஸ் கம்ப்ளைன்ட் எல்லாம் வேணாம் நம்ம வீட்டுக்கு அடிக்க போலீஸ் வருவாங்க என்று ரோகினி சொல்லுகிறார்.

மறுபக்கம் விஜயா இவன எடுத்துட்டு போய் ஆசிரமத்துல விடுங்க என்று சொல்ல அண்ணாமலை கோபப்படுகிறார் பிறகு அவர் நான் விசாரிச்சிட்டேன் போட்டோ மட்டும் எனக்கு அப்புறம் அனுப்புறேன்னு சொல்லி இருக்காங்க அவங்க பாட்டி பேர்தான் கார்டியனா போட்டு இருக்காங்க அவங்க போட்டோ இருக்கு அவங்க அம்மா பேரு கல்யாணி பாரின்ல இருக்குன்னு சொல்றாங்க என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் அவர் பாட்டியின் போட்டோவை அண்ணாமலையில் போனுக்கு அனுப்பி விட அவரும் எல்லோருக்கும் அனுப்பி விடுகிறார். மறுபக்கம் முத்துவும்,மீனாவும் க்ரிஷ் பாட்டி விஷயங்களுக்கு குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

க்ரிஷ் ஓட பாட்டி எந்த காரணமும் இல்லாம இப்படி விட்டுட்டு போக மாட்டாங்க ஏற்கனவே நாங்க நம்ம தத்தெடுத்து வளர்க்கிறோம்னு சொன்னப்போ அவ்வளவு சண்ட போட்டு கோபப்பட்டாங்க ஆனா இதுக்கு பின்னாடி ஏதோ பெரிய காரணம் இருக்குன்னு தோணுது முதல்ல கிரிஷ் ஓட பாட்டியே கண்டுபிடிச்சா அதுக்கான காரணம் தெரிஞ்சிடும் என்று பேசிக் கொண்டிருக்க கிருஷ் இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார் பிறகு சரி தூங்க போகலாம் என்று தூங்கும் விட அனைவரும் தூங்கி விட்ட பிறகு கிரிஷ் வழக்கம் போல் ரோகிணியின் ரூமுக்கு வந்து ரோகிணியை எழுப்பி பேசிக்கொண்டே இருக்கிறார்.மீனா ஆண்டி கண்டிப்பாக பாட்டிய கண்டுபிடிச்சுடுவாங்க என்று சொல்லுகிறார் நான் இங்கே இருக்கட்டுமா என்று கேட்க இல்ல கிருஷ் கேட்க வேண்டாம் என்று சொல்லுகிறார். எல்லாரும் அவங்க அம்மா கூட தான இருக்காங்க நான் மட்டும் ஏன் இருக்கக்கூடாது என்று கேட்க உடனே மனோஜ் தூக்கத்தில் இருந்து பேச ரோகினி பயந்து நீ இப்போதைக்கு போய் தூங்கு என்று சொல்லி அனுப்ப டம்ளர் தட்டி விட்டு கீழே விழுகிறது உடனே முத்துவும் மீனாவும் சத்தம் கேட்டு வந்து கிரிஷ் எங்கே என தேட ரோகிணி ரூமுக்குள் இருந்து வந்தவுடன் எதுக்கு அங்க போன என்று கேட்க பாத்ரூம் வந்ததுன்னு சொல்லுகிறார் உடனே முத்துவும்,மீனாவும் க்ரிஷ் அழைத்துச் சென்று விடுகின்றனர்.

இவன் என்ன எப்ப பார்த்தாலும் அடிக்கடிக்கு நைட் அந்த ரூமுக்கு போறான் என்று மீனா கேட்க பாத்ரூம் வந்ததுன்னு சொன்னாங்க நம்மதான் கீழே போகணும் குழந்தை தானே விடு என்று சொல்ல ரோகினி முதல்ல கிருஷ் வீடைவிட்டு விட்டு அனுப்பனும் என்று முடிவு எடுக்கிறார் மறுநாள் காலையில் மனோஜ் உங்க கிட்ட பேசி எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் என வந்து குடும்பத்தாரிடம் சொல்லுகிறார். இப்ப என்ன முடிவு எடுக்கணும்னு கேக்குற என்று சொல்ல இந்த பையன பத்து நாள் இருக்கட்டும் கூட்டிட்டு வந்தீங்க இப்ப அவங்க பாட்டி வருவதற்கு இருக்கட்டும்னு சொல்றீங்க அப்படி எல்லாம் விட முடியாது என்று சொல்ல,உடனே விஜயாவும் வழக்கம் போல இவனை யாரும் இல்லாத பார்த்து இருக்கிற இடத்தில் எடுத்துக் கொண்டு போய் விடுங்கள் என்று சொல்ல, அவள் சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும் என்று மீனா சொல்லுகிறார்.

பிறகு மனோஜ் எல்லோரிடமும் இந்த பையன் இங்க இருக்கட்டுமா வேணா வேணா ஓட்டு போட்டு கேட்டுரலாம் என்று முடிவெடுக்க பிறகு என்ன சொல்லுகின்றனர்? கிருஷ் என்ன சொல்லுகிறான்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 13-08-25
SiragadikkaAasai Serial Today Episode Update 13-08-25