மீனாவை வெறுக்கும் முத்து, ரோகினிக்கு அடைக்கலம் கொடுக்கும் சிந்தாமணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவின் மீது வெறுப்பை காட்டுகிறார்.

siragadikkaaasai serial today episode update 12-01-26
siragadikkaaasai serial today episode update 12-01-26

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி வித்யா வீட்டிற்கு தங்க வர முருகன் இவங்க இங்க தங்கனா நம்ம முத்து அண்ணனுக்கு துரோகம் பண்ற மாதிரி ஆயிடும் அதனால நான் ஒத்துக்க மாட்டேன் என்று சொல்ல அவ பண்ணது தப்புதான் இருந்தாலும் அவளுக்கு தங்கறதுக்கு இப்போதைக்கு வீடியோ எதுவும் இல்லை ஒரு ரெண்டு நாளைக்கு மட்டும் தங்க வைக்கலாம் என்று சொல்ல இவ்வளவு நாளா நான் உன் பேச்சை கேட்ட இந்த விஷயத்துல நீ என் பேச்சைக் கேளு என்று முருகன் உறுதியாக இருந்துவிட வித்யா ரோகினி இடம் வந்து பேசுகிறார். உடனே ரோகினி எனக்குன்னு வேற யாரு இருக்காங்க வித்யா என்று சொல்ல எனக்கும் வேற வழி தெரியல ரோகினி எனக்கு அவரோட முடிவு தான் முக்கியம் என்று சொல்லிவிடுகிறார்.

அங்கிருந்து வந்த ரோகினி பார்வதி வீட்டுக்கு செல்ல பார்வதி பத்தாயிரம் பணம் கொடுக்கிறார் இந்த பணத்தை வைத்து கொள் உன்னை என்னால வீட்ல தங்க வைக்க முடியாது எனக்கும் விஜயாவுக்கும் ஏற்கனவே மனஸ்தாபம் வந்துருச்சு ஆனா அது முடிவு கிடையாது கண்டிப்பா ஒரு நாள் மாறும் என்று தான் நான் நம்பிகிட்டு இருக்கேன் ஆனா உன்னை இங்க நான் தங்க வச்சா கண்டிப்பா நாங்க சேர முடியாது என்று சொல்லி விடுகிறார் உடனே பணத்தை பார்வதியிடம் கொடுத்துவிட்டு நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு தான் நினைச்சேன் எனக்கு பணம் வேண்டாம் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பார்வதி சிவனிடம் இந்த பொண்ண பார்த்தாலும் பாவமா தான் இருக்கு என்று சொல்ல விஜயாவும் கண்டிப்பா இவள மனோஜ் கூட சேர விடமாட்டா என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் முத்துவை மீனா சாப்பிட கூப்பிட கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் உனக்கு எப்படி இப்படி துரோகம் பண்ண மனசு வந்தது உன்னை எவ்வளவு நம்பிக்கை இருந்தேன் எங்க அப்பா கிட்ட கூட உனக்கு உண்மையை மறைக்க தோணுச்சு உனக்கு பொண்ணு மாதிரி பார்த்தாரு எங்க குடும்பத்தை இரண்டு வருஷமா ஏமாற்றிக்கிட்டு இருக்கிற ஒரு உண்மை உனக்கு தெரிஞ்ச நீ சொல்லாமல் இருக்க நான் அப்போ உனக்கு குற்ற உணர்ச்சியாக இல்லையா என்று கோபப்பட நீனா அழுகிறார் நீ என் முன்னாடி அழக்கூடாது இத கூட நம்ப முடியாது என் கண்ணெதிரே இருக்காத எங்கேயாவது போயிடு என்று கோபத்தில் திட்ட மீனா கண்கலங்கி அழுகிறார். இறுதியாக ரோகிணி வேறு வழியில்லாமல் சிந்தாமணி வீட்டுக்கு செல்கிறார். ரோகிணி அழுது கொண்டே இருக்க சிந்தாமணி சாப்பிடுமா முதல்ல காலைல இருந்து சாப்பிட்டு இருக்க மாட்ட உன் மேல எந்த தப்பும் கிடையாது நீ மனோஜ்க்கு உண்மையா தான் வாழ்ந்து இருக்க இதுக்கு முன்னாடி கல்யாணம் ஆன உன் புருஷன் செத்துட்டா ஒரு குழந்தை இருக்கு இத சொன்னா மட்டும் கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்களா உன் வாழ்க்கைக்காக சொன்ன சின்ன பொய் தான் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க நீ சாப்பிடு என்று சொன்னால் இதை தாண்டி அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க என்று சொல்லி அழ சிந்தாமணி சாப்பிட வைத்து ஆறுதல் சொல்லுகிறார்.

மறுபக்கம் மனோஜ் தூங்கிக் கொண்டிருக்க முத்து மீனா மீனாவின் அம்மா சீதா அவருடைய நண்பர் பி ஏ என அனைவரும் அவரை சுற்றி சிரிப்பது போல தோன்றுகிறது பிறகு என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial today episode update 12-01-26
siragadikkaaasai serial today episode update 12-01-26