Web Ad 2

ரோகினி அடித்து விரட்டிய குடும்பத்தினர், மீனாவை சிக்கவைத்து சென்ற ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினியை குடும்பத்தினர் அடித்து விரட்ட, ரோகிணி வீட்டை விட்டு செல்லும்போது மீனாவை சிக்க வைத்து விட்டு சென்றுள்ளார்.

siragadikkaaasai serial today episode update 09-01-26
siragadikkaaasai serial today episode update 09-01-26

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி குறித்த உண்மை அனைத்தையும் முத்து சொல்லிவிட விஜயா கோபப்பட்டு கன்னத்தில் அறைகிறார் உடனே ரோகினி அண்ணாமலையின் காலை பிடித்து கெஞ்ச அவரும் சென்று விடுகிறார் விஜயாவிடமும் காலை பிடிக்க அவர் கோபத்தில் எட்டி உதைக்க போக அண்ணாமலை நீ ஒதச்சனா அவளை விட தப்பானவளா ஆயிடுவ விடு விஜயா என்று சொல்லுகிறார் உடனே விஜயா உன்ன மாதிரி ஒரு பிறவியை பார்த்ததே கிடையாது நீ எவ்வளவு பொய் சொல்லி இருக்க என்று சொல்ல உடனே ஸ்ருதி அப்போ சீதா உங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க போறதா நீங்க ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு போனது உண்மைதானே அப்போ முதல் குழந்தை கிருஷ் எனக்கு தலையே சுத்துது என்று சொல்லுகிறார்.

உடனே மனோஜிடம் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்க அவர் கன்னத்தில் அரைகிறார். என்னை நம்ப வைத்து ஏமாத்திட்டியே என்று சொல்ல, நான் உண்மையாக தான் உன்னை லவ் பண்ணேன் கடைசி வரைக்கும் கூட வாழனும்னு ஆசைப்படுகிறேன் என்று சொல்ல உடனே விஜயா உனக்கு என் புள்ள கேக்குதா உனக்கெல்லாம் அசிங்கமாக இல்லையா என்று காரி துப்புகிறார். உன் அம்மா காரி வந்து நடிச்சா பாரு என் பொண்ணு செத்து போயிட்டான்னு குடும்பமே நடிக கார குடும்பமா இருக்கு என்று திட்டுகிறார்.உடனே அண்ணாமலை நீ எவ்வளவு பொய் சொல்லிக்கிட்டு இருக்க உனக்கு மனோஜ் மேல் விருப்பம் இருந்து இரண்டாவது கல்யாணம் தானே சொன்னா நாங்களே வீட்ல பேசி இருப்போம் ஒன்னு ரெண்டாவது கல்யாணம் பண்ணது தப்புன்னு சொல்லல நீ எவ்வளவு பொய் சொல்லி இருக்க என்று கேட்கிறார்.

அன்னைக்கு நீ பணக்காரர் இல்லை என்றதே உண்மை தெரிஞ்சதும் விஜயா உன்ன அடிச்சா அப்போ நான் உன்கிட்ட என்ன கேட்டேன் இதுக்கு அப்புறம் எந்த பொய்யும் இல்லையான்னு கேட்டேன் அதுக்கு நீ எந்தப் பொய்யும் இல்லன்னு தானே சத்தியம் பண்ண என்று கேட்கிறார். ரோகினி எதுவும் பேச முடியாமல் இருக்க விஜயா என்னடா பாத்துட்டு இருக்க இவர் தாலியை வாங்கிட்டு துரத்தி விடு மனோஜ் என்று சொல்ல நானும் உங்கள மாதிரி ஒரு பொண்ணு தானே என்ற ரோகினி சொல்ல நீ என் கூட சேர்க்காத நீ சாக்கடை உன்ன மாதிரி தானே புருஷன் ஏமாத்திக்கிட்டு இருக்கேனா என்று கோபப்படுகிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் ரவி ஸ்ருதி என அனைவரிடமும் சென்று எனக்கு ஆதரவா பேசுங்க என்று சொல்ல அனைவரும் பின்வாங்குகின்றனர் வேறு வழி இல்லாமல் மனோஜ் ரோகினியை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளி விடுகிறார். உடனே எழுந்தது நின்ற ரோகிணி மீனாவை பார்த்த முறைத்து விட்டு என்ன பத்தின உண்மை இந்த வீட்டில் உங்களுக்கு மட்டும்தான் தெரியும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு முத்து கிட்ட சொல்லிட்டீங்க இல்ல ரொம்ப நன்றி என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

உடனே குடும்பத்தினர் அனைவரும் மீனாவைப் பார்த்து முறைக்க மீனா என்ன சொல்லுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial today episode update 09-01-26
siragadikkaaasai serial today episode update 09-01-26