Web Ads

பெல்டில் மனோஜை வெளுத்த மீனா, அதிர்ச்சியில் உறைந்த விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

மனோஜ்க்கு விழுந்த அடியை பார்த்து விஜயா உறைந்து போய் உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா இவர்கள் இருவரும் பேசியதில் கடுப்பாகி ரூமுக்கு சென்று பெல்ட்டுடன் வந்து என்னையும் என் புருஷனையும் தப்பா பேசாத இந்த வாய்தானே உனக்கு நண்டு சூப்பு வேணுமா? எங்க குடும்பத்தையே அழ வச்சுட்டு போன உனக்கு நண்டு சூப் வேணுமா என்று பெல்ட்டில் மனோஜை வெளுத்து வாங்குகிறார். மனோஜ் காப்பாத்துமா காப்பாத்துமா என்று சொல்லியும் விஜயா ஒரே போசில் அதிர்ச்சியாக நிற்கிறார். பிறகு ரோகினி வர என் அடிக்கிற என்று மீனாவை தடுக்க உன் புருஷனுக்கு நீ நண்டு சூப் வெச்சு தர மாட்டியா நான் தான் வச்சு கொடுக்கணும் என்று ரோகினியே அடிக்கிறார் இரண்டு பேரையும் மாற்றி மாற்றி அடிக்க இரண்டு பேர் மன்னிச்சிடு என்று கேட்டவுடன் விஜயாவை பார்க்க விஜயா தானாகவே சோபாவின் மேல் விழுகிறார். பிறகு தான் தெரிகிறது இது அனைத்துமே மீனாவின் கற்பனை என்று. அதனை நினைத்து மீனா சிரித்துக்கொண்டே இருக்க எதுக்கு சிரிக்கிற என்று இருவரும் கேட்கின்றனர் ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லாமல் ரொம்ப நேரமாக சிரித்துக் கொண்டே இருக்கிறார் ரோகினி வந்தவுடனும் கேட்க அப்போதும் ரோகிணியை பார்த்து சிரித்துக்கொண்டே இருக்க உனக்கு பைத்தியம் புடிச்சிருக்கா என்று விஜயா கேட்க அது ரகசியமாக இருக்கட்டும் என்று மீண்டும் சிரித்துக்கொண்டே போய் மேலும் கிச்சனிலும் சிரித்துக் கொண்டே இருக்கிறார். இதனால் விஜயா எல்லாத்துக்கும் சிரிக்கிற எதற்காக என்ன பார்த்து சிரிக்கிறா என்று கடுப்பாகிறார்.

உடனே முத்து வர உன் பொண்டாட்டிக்கு ஏன் இப்படி நடந்துக்கற என்று கேட்க என் பொண்டாட்டியா மனோஜ் தான் இப்படி நடந்துக்கிட்டு இருந்தா. என்று கிண்டல் பண்ண உடனே அவ எங்கள பாத்து சிரிச்சுக்கிட்டே இருக்கா என்னன்னு கேளு என்று சொல்லுகிறார். உடனே கிச்சனிலிருந்து மீனா வர மீண்டும் அவர்களைப் பார்த்து சிரிக்கிறார்.

இதனால் கடுப்பான விஜயா ஒழுங்கா என்னன்னு கேட்டு சொல்லு என்று சொல்லுகிறார். மீண்டும் சொல்ல மறுத்த மீனா முத்து கேட்டவுடன் காதில் நடந்த விஷயங்களை சொல்லுகிறார். முத்துவும் விழுந்து சிரிக்கிறார். இதனால் விஜயா கடுப்பாகி இப்ப நீயும் எதுக்குடா சிரிக்கிற என் வயிறு எல்லாம் எரியுது என்று டென்ஷன் ஆகிறார். அந்த நேரம் பார்த்து அண்ணாமலை வர என்ன எல்லாரும் சந்தோஷமா சிரிச்சு பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார். எல்லாரும் எங்க பேசிக்கிட்டு இருக்கோம் இந்த மீனா ஏதோ சிரிச்சுகிட்டு இருக்கா இவங்கட்ட சொன்னா இவனும் சிரிக்கிறா என்ன பத்தி ஏதோ சொல்லி இருக்கா கேளுங்க என்று சொல்ல ஒருத்தரப் பத்தி கேட்டா அது தப்பாகும் அதனால கேட்காம விடு என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்றுவிட , முத்துவும் மீனாவும் சிரித்துக் கொண்டே ஓடிவிடுகின்றனர்.

SiragadikkaAasai Serial Episode Update
SiragadikkaAasai Serial Episode Update

ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் எதுக்காக வந்திருக்கா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றதால் ஏதாவது பிரச்சனை கண்டிப்பா இருக்கும் ரவி எப்படியும் வருமா என்று சொல்லிக் கொண்டிருக்கிற ரவி வருகிறார். அவரை வரவைத்து உட்காரு என்று சொல்ல ஸ்ருதிய பாக்கணும் என்று சொன்னவுடன் மேல இருக்கா போய் பாரு என்று சொல்லுகிறார். ரவியும் சுருதியை பார்க்க செல்கிறார்.

ஸ்ருதி கோவமாக இருக்க ரவி மன்னிப்பு கேட்டு சமாதானப்படுத்துகிறார். நான் பண்ணது ரொம்ப தப்பு தான் இதை எனக்கு உடம்பு சரியில்லைன்னா நீ இருந்து பார்த்து இருப்ப இல்ல நான் இனிமே அப்படி பண்ண மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டு டைமண்ட் ரிங் பரிசாக கொடுக்கிறார். இதனால் சுருதி மன்னித்து இருவரும் வீட்டுக்கு கிளம்ப கீழே இறங்கி வருகின்றனர். ஸ்ருதியின் அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டு இருவரும் கிளம்பி விடுகின்றனர்.

ரோகிணி வித்யாவிற்கு ஃபோன் போட்டு முத்துவிடம் இருக்கும் வீடியோவை எடுக்க ஒரு ஐடியா இருக்கு சொல்லி முடிவெடுக்கிறார். அந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகுமா? முத்துவிடம் இருக்கும் வீடியோவை எப்படி எடுக்கப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update
SiragadikkaAasai Serial Episode Update