உண்மையை தெரிந்து வீட்டுக்கு வந்த பாட்டி, சமாதானமான முத்துமீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
பாட்டிக்கு உண்மை தெரிந்து குடும்பத்தினரிடம் வந்து பேசியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி வந்து மீனா மற்றும் ஸ்ருதி இடம் உதவி கேட்க அவர்கள் செய்ய மறுக்கின்றனர் உடனே நீங்களும் உங்க புருஷனோட சந்தோசமா வாழ்ந்துருவீங்களா காலம் எப்பவுமே ஒரே மாதிரி இருக்காது கண்டிப்பா மாறும் நீங்களும் வந்து என்கிட்ட இது மாதிரி கேட்கிற நிலைமை வரவேண்டும் அப்ப நானும் இது மாதிரி தான் பதில் சொல்லுவேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட உடனே ஸ்ருதி முதல்ல கெஞ்சுற மாதிரி கெஞ்சிட்டு சரி உதவி செய்ய முடியாதுன்னு சொன்ன உடனே எப்படி கோபப்படுறாங்க பாருங்க என்று சொல்ல இப்பதான் ரோகினியோட கேரக்டர் புரியுது என்று சொல்லுகின்றனர்.
மறுபக்கம் பாட்டி வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க மருத்துவம் அண்ணாமலையும் வீட்டுக்கு வருகின்றனர் இருவரும் என்ன செய்வதென்று புரியாமல் இருக்க பாட்டி என்கிட்டே உண்மையை மறைச்சிட்டீங்கல்ல என்று கோபப்பட்டு கேட்கிறார் அது சொல்லலாம்னு இருந்தோம் என்று சொல்லி ஆரம்பிக்க உடனே மீனாவுக்கு மயக்கம் வந்த விஷயத்தை பாட்டி சொல்லுகிறார் அண்ணாமலையும் முத்துவும் அமைதியாகிவிட மீனா வந்து விடுகிறார் என்ன ஆச்சு மீனா உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னவுடனே என்னாச்சுன்னு தெரியாம பதறிப்போய் ஓடி வந்தேன் என்று சொல்லுகிறார். இதை யாரும் உங்ககிட்ட சொன்னது என்று கேட்க ஸ்ருதி நான் தான் சொன்னேன் என சொல்லுகிறார்.
உடனே பாட்டி விசாரித்துக் கொண்டிருக்க மீனா இந்த நிலைமைக்கு ஆளாகத்துக்கான மூல காரணமும் எனக்கு தெரியும் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் பிறகு ரோகினி விஷயத்தைதான் சொல்றேன் எனக்கு எல்லா விஷயமும் தெரியும் என்று சொன்னவுடன் அனைவரும் ஸ்ருதியை பார்க்க நான் சொல்லல என்று சொல்ல விஜயா வந்து நான் தான் சொன்னேன் இவ்வளவு பெரிய விஷயம் நம்ம வீட்ல நடந்து இருக்கு அத்தை கிட்ட சொல்லாம எப்படி இருக்க முடியுமா உங்களுக்கு அது மரியாதையாக இருக்காது என்று சொன்ன அண்ணாமலை நீ என்கிட்ட சொல்ல வேண்டாமா என்று கேட்க உடனே பாட்டி அவளை எதுக்கு நீ கேக்குற நீ தான் என்கிட்ட உண்மையை சொல்லி இருக்கணும் நீயே என் சொல்லலை என்று சொல்ல பிறகு மனோஜ் வருகிறார் உடனே பாட்டியை பார்த்தவுடன் கண் கலங்கி அழ அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார் இப்ப நான் உங்களை முக்கியமா எதுக்கு வர வச்சேனா அவளை டைவர்ஸ் பண்ணிட்டு மனோஜ்க்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க போறேன் அதுக்கு இவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருக்கணும் என்று சொல்லுகிறார்.
உடனே பாட்டி உனக்கு மனோஜ் மேல் எவ்வளவு உரிமை இருக்கோ அதே மாதிரி அண்ணாமலைக்கும் இருக்கு அவனோட வாழ்க்கையில நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு எடுக்கணும் என்று சொல்லிவிட்டு மனோஜ் மனசிலும் என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணும் என்று சொல்ல உடனே மனோஜ் அம்மா எனக்கு இது பண்ணாலும் கரெக்டா இருக்கும் என சொல்ல சரி உன் தலையில என்ன எழுதி இருக்கும் என சொல்லிவிட்டு பாட்டி கிளம்பி விடுகிறார். மறுபக்கம் முத்து கிச்சனுக்கு போக மீனா எதுக்காக இப்ப கிச்சனுக்கு வந்தீங்க என்று கேட்கிறார் அதுதான் நான் உன்னை புரிஞ்சுகிட்ட எல்லாமே அதனாலதான் உனக்கு அல்வா செஞ்சு கொடுத்து சமாதானம் செய்யப் போறேன் என்று சொல்ல மீனா எவ்வளவு சொல்லியும் முத்து கேட்காமல் நீங்க போய் உட்காருங்க நான் சமைச்சு எடுத்துட்டு வரேன் என்று சொல்லி ஸ்ருதியுடன் அனுப்பி வைக்கிறார் கொஞ்ச நேரத்தில் முத்து அல்வாவை ரெடி பண்ணி எடுத்துக் கொண்டு வந்து மீனாவுக்கு ஊட்டி விட அது வாயில் ஒட்டிக்கிறது உடனே மீனாவால் எதுவும் பேசாமல் இருக்க சுருதி ரவி மனோஜ் விஜயா என அனைவருக்கும் ஊட்டி விட அனைவரும் வாய் பேச முடியாமல் ஆகிவிடுகின்றனர்.
உடனே கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை வர அவருக்கும் ஊட்டி விடப் போக குடும்பத்தினர் கையை அசைத்து வேண்டாம் என சொல்ல அண்ணாமலை எதற்காக வேண்டானு சொல்றீங்க என்று சொல்ல அனைவரும் ஓடிப்போய் துப்பி விட்டு அது வாயில போட்டு உன்னை கோந்து மாதிரி ஒட்டிக்குது சாப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்ல முத்துவை மீனாவும் ஸ்ருதியும் கிண்டலடுக்கின்றனர். அனைவரும் சென்று விட முத்துவும் மீனாவும் இரவு ஒன்றாக பேசி சந்தோஷமாக இருக்கின்றனர் விரல்களுக்கான அர்த்தத்தை முத்து மீனா பேசிக் கொண்டிருக்க இதுக்கு மேல உங்க கிட்ட நான் எந்த விஷயத்தையும் மறைக்க மாட்டேன் இப்போ ஒரு விஷயம் சொல்ல தான் வந்தேன் என்று ரோகிணி வந்து சந்தித்த விஷயத்தை சொல்லி விடுகிறார் மறுநாள் காலையில் மனோஜ் வழக்கம்போல் வெளியில் வந்து ரோகினி என்னோட ரெட் சர்ட் காணோம் என்று சொல்ல குடும்பத்தினர் அதிர்ச்சி ஆகி பார்க்கின்றனர் உடனே விஜயா கவனித்து உனக்கு எப்படிடா அவ பேரு வாயில் வருகிறது என்று கோபப்படுகிறார்.
உடனே குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அது எப்படி இரண்டு வருஷம் வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியுமே ஏதாவது ஒரு விஷயம் ஞாபகப்படுத்திக்கிட்டு தான் இருக்கும் என்று சொல்ல உடனே விஜயா அவன் ஞாபகமாய் இந்த வீட்டில் எதுவுமே இருக்கக் கூடாது என்று சொல்லி ஹாலில் இருக்கும் போட்டோவை தூக்கி போட்டு உடைத்து அதிலே இருக்கும் போட்டோவை எடுத்து கிழித்து மனோஜிடம் கொடுத்து இதை எரித்து விடு இதுக்கு மேல எந்த ஞாபகமும் வராது என்று சொல்ல அவரும் எரித்து விடுகிறார் அந்த நேரம் பார்த்து மனோஜ் கடன் வாங்கிய நபர் வர அவர் குடும்பத்தில் நடந்த விஷயங்களை சொல்லுகிறார் இது எங்களோட குடும்ப விஷயம் நாங்க தான் உங்களுக்கு பணம் கொடுக்குறோம்னு சொல்லிட்டோமே என்று அண்ணாமலை சொல்ல உங்க பயணம் நம்பி ஒரு பா பிரயோஜனம் கிடையாது உங்க பையன் ஜீரோ என்று சொல்லுகிறார்.
உடனே அண்ணாமலை எங்க பையன பத்தி எங்க கிட்டயே ஒரு தப்பா பேசுறீங்களா என்று சொல்ல உடனே அவர் என்ன சொல்லுகிறார்? அதற்கு குடும்பத்தினர் பதில் என்ன? விஜயாவின் முடிவு என்ன?என்பதை எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.
