மாநாடு படப்பிடிப்பில் நடிகர் சிம்பு விடாமல் அழுதுள்ளார்.
Simbu Emotions on Maanadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது.
டைரக்டர் ஷங்கர் மகள்- கிரிக்கெட் அணி கேப்டன் திருமணம்
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியானதை தொடர்ந்து படக்குழுவினருடன் சிம்பு ட்விட்டர் ஃபேஸ் மூலமாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது மாநாடு படத்தின் போது நீண்ட நேரம் கண்ணீர் விட்டு அழுததாக கூறியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்தபோது எமோஷனல் சீனில் நடிப்பது கஷ்டமாக இருந்தது. அடிவாங்கி எல்லாம் அழுது நடித்துள்ளேன். ஆனால் தற்போது அது கேக் பீஸ் சாப்பிடுவது போல ஆகிவிட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் கூட அழுகையை அடக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
Vijay பட தயாரிப்பாளருடன் இணையும் சிம்பு! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்