சிம்பு நடித்தால் நடிக்க முடியாது என பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளனர் பிரபல நடிகர்கள்.

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி என பலர் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு அவர்களும் நடிக்க இருந்தார்.

ஆனால் இந்த படத்தில் சிம்பு நடிப்பதாக கேள்விப்பட்டது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இரண்டு நடிகர்கள் சிம்பு நடித்தால் நாங்கள் விலகி கொள்வோம் என கூறியுள்ளனர். அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவை அணுகிய போது அவரும் சிம்பு நடித்தால் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த விஷயத்தை இயக்குனர் மணிரத்னம் சிம்புவுடன் தயக்கத்தோடு கூற அவர் யாரும் படத்திலிருந்து விலக வேண்டாம் நானே விலகிக் கொள்கிறேன் என முடிவெடுத்து இந்த படத்தில் நடிக்கும் முயற்சியை கைவிட்டு உள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாக்கி சிம்பு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.