சிம்புவின் 50 ஆவது படம் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பரமாக நடைபெற்று வரும் நிலையில் 49வது திரைப்படத்தை தாண்டி சிம்புவின் 50 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட் வைரலாகி வருகிறது. அதன்படி, சிம்புவின் 50வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளதாகவும் இதனை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்து வரவேற்பை பெற்றிருந்ததால் இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்து வைரலாகி வருகிறது.