கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன் என சாந்தனு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சாந்தனு. பாக்கியராஜின் மகனான இவர் தொகுப்பாளினி கிகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் தற்போது வரை குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் சாந்தனு.
அதாவது எங்கே கல்யாணத்திற்கு சென்றாலும் எப்போ குழந்தை கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள். நாங்கள் இருவருமே தற்போது கரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என முடிவெடுக்கவில்லை. வரவேண்டிய நேரத்தில் நிச்சயம் வரும் என தெரிவித்துள்ளார்.