VJ Chithra Commit Suicide : தமிழ் சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் சித்ரா. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலமாக சித்ராவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வண்ணம் இருந்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் தொழில் அதிபர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்திருந்த நிலையில் பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மன விரக்தி காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவருடைய தற்கொலை சம்பவம் சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு போதும் தற்கொலை தீர்வல்ல என சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.