Senthil Rajalakshmi About VijayTv Show

விஜய் டிவி நிகழ்ச்சியால் ஏற்பட்ட கேலி கிண்டல்கள் குறித்து பல மாதங்கள் கழித்து பேசியுள்ளனர் செந்தில் ராஜலட்சுமி.

Senthil Rajalakshmi About VijayTv Show : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர்.

இவர்கள் இருவரும் புஷ்பா படத்தில் கூட வா சாமி என்ற பாடலை பாடினார்கள். இந்த வாய்ப்பு குறித்து பேட்டி ஒன்றில் இருவரும் பேசியுள்ளனர். அதாவது நாங்க சின்ன மியூசிக் டைரக்டர், பெரிய மியூசிக் டைரக்டர் என்றெல்லாம் பார்க்க மாட்டோம்.

Live-ஆக மேடையில் பாட்டு பாடி தெறிக்கவிட்ட Sid Sriram! | Chennai International Film Festival | HD

சந்தனம், குங்குமம் பூசுவதன் காரணிகள்.!

புஷ்பா படத்தின் பாடலை பாடவேண்டும் என தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து போன் வந்தது எங்களால் நம்பமுடியவில்லை. அல்லு அர்ஜுன் கூட தெலுங்கில் அளித்த பேட்டியில் எங்களைப் பற்றி பேசியுள்ளார். அது எல்லாம் கேட்க சந்தோஷமாக இருந்தது.

ஆனால் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நாங்கள் கண் கலங்கியது அழுததை மக்கள் கேலி கிண்டல் செய்து பதிவு செய்திருந்தது வருத்தமடையச் செய்தது. அவர்கள் எப்படி அவர்களது குழந்தைகளுக்காக உழைக்கிறார்களோ அப்படித்தான் நாங்களும் எங்களது குழந்தைகளுக்காக உழைக்கிறோம். இதை ஒப்பிட்டுப் பேசுவது தவறு. இது எங்களுடைய தவறு இல்லை சமூகத்தின் தவறு என கூறியுள்ளார்.

இப்படி யாரையும் யாருடனும் ஒப்பிட்டு பேசாதீர்கள் என கேட்டுக்கொண்டுள்ளனர்.