Sembaruthi 30.10.18 : வங்கியில் பண பரிமாற்றம் முடக்கப்பட்டதால் ஊழியர்களுக்கு போனஸ் தரமுடியாத நிலையில் சிக்கியுள்ளார் அகிலா.
வங்கியிலிருந்து பணப்பரிமாற்றம் நடைபெற ஆறு மணி நேரம் ஆகும் என்று ஆதி கூறுகிறார்.
ஆனால் அகிலா கடந்த இருபத்தைந்து வருடங்களாக பூஜை முடிந்தபின் ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பதை நான் வழக்கமாக வைத்துள்ளேன்.
இது என்னுடைய கவுரவப் பிரச்சினை என்று சொல்லி குமுறுகிறார்.
பணம் கிடைக்க ஏதேனும் ஒரு வழி உள்ளதா என்று அனைவருமே யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது பார்வதி , ஆதியிடம் வந்து ,என்னுடைய பணத்தை ஷேரில் போட்டிருக்கிறீர்கள் அல்லவா, அந்த பணத்தை இப்பொழுது பயன்படுத்தலாமே என்று யோசனை சொல்கிறாள்.
அதைக் கேட்ட அனைவரும் அவ்வளவு பணம் உங்க உன்கிட்ட இருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
ஆனால், ஆதி அதை மறுக்கிறார். பார்வதியிடம் 104 கோடி உள்ளதாக கூறுகிறார். அனைவருமே ஆச்சரியப்படுகின்றனர்.
அவ்வளவு பணம் பார்வதியிடம் எப்படி வந்தது என்று அனைவரும் யோசிக்கும்போது ஆதி சிங்கப்பூரில் பார்வதிக்கு கிடைத்த பணம் மேலும் பார்வதிக்கு நாம் கொடுக்கும் சம்பளம் இவை அனைத்தையும் நான் நேரில் போட்டதால் பார்வதியிடம் 104 கேடி சேர்ந்துள்ளது என்கிறார்.
பார்வதி இந்த பணத்தை எடுத்து ஊழியர்களுக்கு போனஸ் தரும்படி அகிலாவிடம் கூறுகிறாள். ஆனால் அகிலா அதை மறுக்கிறார்.
அனைவரும் வற்புறுத்திய பிறகு அகிலா சம்மதிக்கிறார். கடுங்கோபத்துடன் வனஜாவும் ஜஸ்வர்யாவும் இருக்கிறார்கள்.
பார்வதியின் பணத்தை பயன்படுத்திய அகிலா, பார்வதிக்கு நன்றியைத் தெரிவிக்கிறார்.
மும்பையில் உள்ள நந்தினியும் செல்போன், டிவி ,மின்சாரம் என அனைத்து இணைப்பையும் தடை செய்து விடுகிறார்கள்.
நந்தினி ஏதும் அறியாமல் திகைத்து நிற்கிறாள். நாளைய எபிசோட்டில் நந்தினியை பழி வாங்குவாளா அகிலா?
நந்தினி மற்றும் வனஜாவின் திட்டத்தை அறிந்து கொண்ட ஆதியின் அடுத்த திட்டம் என்ன? என்பதை நாளைய பகுதியில் பார்க்கலாம்.