Sembaruthi 27.10.18

Sembaruthi 27.10.18 : ஆதி ,பார்வதியிடம் கொலுவின் இறுதி நாளன்று வனஜா சித்தியிடம் ஜாக்கிரதையாக இரு என்று கூறுகிறார்.

மேலும் நீ நினைத்தவாரே அம்மாவின் சம்மதத்தோடு  உனக்கு உண்மையாக தாலி கட்டுகிறேன் என்று கூறுகிறார்.

அதுவும் கொலுவின் இறுதி நாளுக்குள்  நம் காதலை பற்றி அம்மாவிடம் சொல்லி சம்மதத்தை  வாங்குகிறேன் என்று கூறி பார்வதியை தைரியப்படுத்துகிறார்.

மறுநாள் வனஜா ,பார்வதி அணிந்திருக்கும் பரம்பரை செயினை போன்ற போலியான ஒரு பரம்பரைச் செயினை செய்திருக்கிறாள். அப்பொழுது  ஐஸ்வர்யா அங்கு வருகிறார்.

வனஜா ஐஸ்வர்யாவிடம் இன்று கொலுவின் இறுதி நாளன்று சொர்ணாபிஷேகம் நடைபெறும் அப்போது பார்வதி பரம்பரை செயினை கழட்டி அம்பாளுக்கு செலுத்துவாள்.

அப்போது சந்தர்ப்பம் பார்த்து இந்த போலி செயினை வைத்து உண்மையான செயினை நான்  கைப்பற்றி விடுவேன் என்று  சொல்கிறாள்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை அருண்  பார்த்து விடுகிறார்.

ஐஸ்வர்யா வனஜா சித்திக்கு சாதகமாக தான் செயல்படுகிறார் என்பதை அறிந்து கொள்கிறார்.

ஆதி ,பார்வதி  இன்னும் வரவில்லையே என்று பதட்டத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கிடையில் மும்பையிலுள்ள நந்தினி, அகிலா ஊழியர்கள் அனைவருக்கும்  போனஸ்  தர முடியாத படி ஏதேனும் ஒரு சிக்கலில் சிக்க வைக்க திட்டம் தீட்டி ,பேங்க் மேனேஜரிடம் போனில் பேசுகிறார்.

நந்தினி வேண்டுகோளின் படி பேங்க் மேனேஜர்  அவளுக்கு ஒத்துழைப்பை கொடுக்கிறார்.

ஆதி கொலுவில் உள்ள அம்பாளின் விளக்கை பார்வதியை  ஏற்ற சொல்கிறார். அதற்கு பார்வதி இந்த விளக்கை இந்த வீட்டின் மூத்த மருமகள் தான் ஏற்ற வேண்டும்.

அது தான் முறை என்று கூறுகிறாள். அதற்கு ஆதி நீ தான் இந்த வீட்டின் மூத்த மருமகள் .

நான் உன் கணவன் செல்கிறேன் விளக்கை ஏற்று என்று பார்வதியை தைரியப்படுத்தி ஏற்ற சொல்கிறார். பார்வதியும் விளக்கை
ஏற்றுவதற்காக தீக்குச்சியை எடுக்கிறாள்.

அந்த சமயம் அகிலாவும் மாடியிலிருந்து  இறங்கி வருகிறாள். நாளைய எபிசோட்டில்  பார்வதி விளக்கை ஏற்றுவாளா?  ஆதி பார்வதியின் காதல் அகிலாவிற்கு தெரிய வருமா?  சவாலில் ஜெயிப்பாளா வனஜா?  அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.