என்னை மன்னித்து விடுங்கள் என மாநாடு படக்குழுவினருடன் மன்னிப்பு கேட்டு பதிவு செய்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
Selvaraghavan About Maanadu Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான இந்த படம் 100 கோடியை தாண்டி வசூல் செய்து சிலுவை திரைப்பயணத்தில் புதிய மைல்கல்லாக இடம்பெற்றுள்ளது.
தற்போது இந்த படத்தினை பார்த்து செல்வராகவன் அது குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் தாமதமாய் “ மாநாடு “ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். !! சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பு அருமை. நண்பர்கள் யுவன், வெங்கட் பிரபு மற்றும் படக் குழுவினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.