இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது.

Santhosh P Jayakumar Upcoming Movie Update : நடிகரும், இயக்குனருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் புதிய படம் இன்று சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.

தெறிக்கவிட்டார் மிட்செல் மார்ஷ், திணறிப் போனார் கிறிஸ் கெயில்..

‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

Vijaysethupathi-யை தொடர்ந்து Siva எடுக்கும் Risk! – ஏற்பார்களா தனுஷ் ரசிகர்கள்? | Latest Cinema News

பல்லூ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் மினி ஸ்டுடியோ என்னும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் வினோத்குமார் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.