சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து உள்ள நிலையில் தர்ஷன் கைதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sanam Shetty Complaint on Tharshan : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த ஈழத் தமிழரான இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.
இவர் தன்னுடைய காதலியான சனம் ஷெட்டி உதவியதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக அப்போது தகவல் வெளியானது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் தன்னுடைய காதலியை பிரிந்தார் சனம் ஷெட்டி.
இவர் தற்போது நான்காவது சீசனில் போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார். இந்த நிலையில் தற்போது சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பெண் வன்கொடுமை, மோசடி புகார் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தர்ஷனை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சனம் செட்டி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள முதல் நாளே இப்படி ஒரு தகவல் வெளியாகியிருப்பது தர்ஷன் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.