வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார் ஸ்ருதி ஹாசன். விமான நிலையத்தில் இறங்கியவுடன் ஒரு கும்பல் அவரைப் பின் தொடர அந்த கும்பலிடம் இருந்து யாரும் அவரைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், தேவா (பிரபாஸ்) மட்டுமே அவருக்கு உதவ முடியும் என்ற சூழ்நிலை உருவாகிறது. ஆனால் தேவா தனது அம்மாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் இருக்கிறார்.
இப்படியான நிலையில் அவர் ஸ்ருதிஹாசனை எப்படி மீட்கிறார். அம்மாவுக்கு அப்படி ஒரு சத்தியம் செய்து கொடுக்க என்ன காரணம் என பல முடிச்சுகளை கொண்ட கதை தான் இந்த சலார்.
படத்தை பற்றிய அலசல் :
பிரபாஸ் தனி ஆளாக படத்தை தன் மீது சுமந்து மிகப்பெரிய பலமாக இருந்துள்ளார்.
வில்லனாக நடித்துள்ள பிரிதிவி ராஜ் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.
படத்தின் இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
பிரசாந்த் நீல் கேஜிஎப் போன்ற ஒரு வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து பிரபாஸ் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ட்ரீட்டாக இந்த படத்தை கொடுத்துள்ளார்.