பாக்கியலட்சுமி சீரியலில் குக்கு வித் கோமாளி ரித்திகா செய்த வேலை அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது ‌‌‌.

Rythvika Singing Own Voice in Bhagyalakshmi Serial : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கிய லட்சுமி. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. ராஜா ராணி சீரியலில் சஞ்சீவின் தங்கையாக நடித்த இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பங்கேற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சாக்கலேட் என்ற சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் இவர் கோவிலில் குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என்ற பாடலை பாடுகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் திடீரென ஏன் இந்த தேவையில்லாத காட்சி என கிண்டல் அடித்தனர்.

ஆடி அமாவாசை : முன்னோரை வழிபட, தேடி வரும் நன்மைகள்..

இதுகுறித்து ரித்திகா விளக்கமளித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதாவது அது என்னுடைய சொந்த குரலில் பாடிய பாடல். பாடகர்கள் என்னை மன்னித்து விடவேண்டும். நான் முறையாக பாட்டு பாடுவதை கற்கவில்லை என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Corona-வால் தாமதமாகும் Bigg Boss Season 5 – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Kamal Haasan