ரோபோ சங்கர் குடிக்கு அடிமையாகி இருந்ததாக மகள் இந்திரஜா சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் ரோபோ சங்கர்.
இவர் சமீபத்தில் உடல் மெலிந்து மிகவும் மோசமாக ஒல்லியாக மாறியதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் மஞ்சள் காமாலையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தற்போது போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திரஜா சங்கர் தன்னுடைய அப்பா ரோபோ சங்கர் போதைக்கு அடிமையாகி இருந்தார். அதனால் அவர் நிறைய உடல்நல பிரச்சனைகளை சந்தித்தார்.
தற்போது அதிலிருந்து முழுவதுமாக வெளியே வந்து புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். வருங்கால இளைஞர்கள் போதை பொருட்களை நிராகரித்து போதைப்பொருட்கள் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.