கணவரோடு சேர்ந்து மகிழ்ச்சி ஆன செய்தியை கூறியுள்ளார் ரித்திகா தமிழ் செல்வி. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. 

பாக்கியலட்சுமி சீரியல் மட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இன்னும் பாப்புலர் ஆனார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் பணியாற்றி வரும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த இவர் அமுதா கேரக்டர் இரண்டு புருஷன் கதையாக மாறுவதால் அதிலிருந்து வெளியேறினார். தற்போது தன்னுடைய கணவருடன் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது அவருடன் இணைந்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

முதல் திருமண நாளை கொண்டாடும் விஷயத்தை தான் ரித்திகா தமிழ்ச்செல்வி உருக்கமாக பதிவிட்டு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பலரும் இவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.