தனுஷ் இயக்கி நடிக்கும் ராயல் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது ராயன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை அவரே இயக்கி நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் நடிக்க சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை என்ன என்பது குறித்த தகவல் என்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதாவது,தனுஷின் குடும்பத்தை கொலை செய்து விடுகிறார்கள். தன் குடும்பத்தை கொலை செய்தவர்களை தேடி செல்லும் தனுஷ் அவர்களை பழி வாங்கினாரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை என சொல்லப்படுகிறது.
இந்த திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.