தவறான தகவல்கள் குறித்து இராவண கோட்டம் படக்குழு அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சாந்தனு. இவர் தற்போது நடித்திருக்கும் “இராவண கோட்டம்” திரைப்படம் மே 12 ஆம் தேதியான நாளை திரைக்கு வர இருக்கிறது. கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ஐன்ஸ்டீன் பிரபாகரன் இசையமைப்பில் கண்ணன் ரவி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இப்படம் குறித்து படக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கை வைரலாகி வருகிறது. அதில் அவர்கள், மண் சார்ந்த கதையை, மனிதத்தை, அன்பை விதைக்கும் படைப்பாக உருவாகி இருக்கும் இராவண கோட்டம் திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்ட கதையாகும். படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தி உள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்த வில்லை. தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டு படக்குழு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.