சரவணன் கைக்கு 5 லட்சம் ரூபாய் பணம் கிடைத்த நிலையில் அதனை திருட திட்டம் போடுகின்றனர்.
Raja Rani2 Episode Update 21.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியா சர்டிபிகேட்டுகளை வைத்து பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே வந்த சரவணன் இவ்வளவு போட்டியில் கலந்து ஜெயிச்சிருக்கீங்க இதெல்லாம் என்கிட்ட சொல்லவே இல்ல என கூறுகிறார். இதெல்லாம் சொல்றதுக்கு சந்தர்ப்பம் வரவில்லை என கூறுகிறார்.
உங்களுக்குள்ள கண்டிப்பா ஒரு ஆசை இருக்கும் அது என்ன என சரவணன் கேட்கிறார். இது தான் சரியான சந்தர்ப்பம் என சந்தியா தன்னுடைய ஐபிஎஸ் கனவு பற்றி சொல்ல முற்படுகிறார். இந்த நேரத்தில் சிவகாமி கூப்பிட சந்தியா வெளியே எழுந்து சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் சரவணன் குடோனுக்கு கிளம்ப அந்த நேரத்தில் வந்த ஆதி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என கூறுகிறார். என்னடா என்ன விஷயம் என சரவணன் கேட்க வேலை அதிகமாக இருக்கிறது இப்போது என்கிட்ட இருக்கு போன் சரியாக இல்லை. அதனால எனக்கு ஒரு போன் வாங்கி தாங்க என கூறுகிறார். அதா சம்பாதிக்கிற எல்லா உன்கிட்ட இருக்கா பணத்துல வாங்கிக்கோ என சரவணன் சொல்ல அதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகும் எனக்கு இப்பவே போன் வேண்டும் என கூறுகிறார். சரி எவ்வளவு செலவாகும் என சரவணன் கேட்க ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும் என கூறுகிறார். அவ்வளவு பணத்துல போன் இருக்கா? அவ்ளோ பணம் கொடுத்துதான் வாங்கணும் என சரவணன் கேட்க நான் என்ன கேம் விளையாட வா கேட்கிறேன் வேலை செய்யத் தானே கேட்கிறேன் என கூறுகிறார். சரி வாங்கிக்கலாம் என சரவணன் சொல்ல அந்த நேரத்தில் அதெல்லாம் வேண்டாம் என சந்தியா குரல் கொடுக்கிறார். பிறகு போன்ல பிரச்சனைனா அதே கடையில் கொடுத்து சரி பண்ணு ஆயிரம் ரூபாய்ல முடிஞ்சிடும். இல்லனா போனுக்கு செலவு பண்ற பணத்தை வைத்து வேற ஏதாவது படி. அது உன்னுடைய கரியருக்கு உதவும் என கூறுகிறார். சரவணனும் சந்தியா சொல்வது தான் சரி என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
பிறகு வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அந்த நேரத்தில் டீயுடன் சந்தியா வருகிறார். நீங்க போட்டுட்டியா அப்போ நல்லாவே இருக்காது என ஆதி நக்கல் அடிக்க அப்படினா நாளைக்கு நீயே டீ போட்டு எல்லாருக்கும் கொடு என சரவணன் கூறுகிறார். அதன்பிறகு ஆதியின் போனை கேட்கிறார் சரவணன். போன் நல்லா தானே இருக்கு அப்புறம் எதுக்கு புது போன் என சரவணன் கேட்க அதான் ரெண்டு பேரும் வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட்டேன் அப்புறம் என்ன என கூறுகிறார் ஆதி. சிவகாமி ஆதியை திட்டுகிறார்.
இந்த நேரத்தில் ஐந்து லட்சம் ரூபாய் பணத்துடன் நிகழ்ச்சி நடத்திய குழுவில் இருந்து இருவர் வருகின்றனர். அவர்கள் சரவணன் கையில் பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த பணத்தை பேங்குல போட்டு விடலாம் என சரவணன் சொல்லி அதை சந்தியாவிடம் கொடுத்து உள்ளே வைக்கச் சொல்கிறார்.
கடைக்குப் போன அர்ச்சனா பக்கத்துல இருக்க கடையை காலி பண்ண சொல்லி விடலாம் என கூறுகிறார். எதற்கு எனகேட்க அதான் கடையை விரிவு படுத்தலாம்னு சந்தியா சொன்னது உங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா என கேட்கிறார். சரவணன் ஜெயிக்க கூடாது என்று என்னென்னவோ தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ண ஆனால் ஜெயிச்ச பணம் மட்டும் உனக்கு தேவையா என செந்தில் திட்டுகிறார். சந்தியாவின் பெருந்தன்மையை பற்றி சென்ற உடனே சந்தியா புராணத்தை ஆரம்பிச்சிட்டீங்களா என அர்ச்சனா செல்கிறார். நியாய தர்மம் எல்லாம் பேசாம பணத்தை வெச்சு என்ன பண்ணலாம்னு பாருங்க என அர்ச்சனா சொல்ல அவரை திட்டி விட்டு செல்கிறார் செந்தில்.
இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து வெளியான புரோமோ விடியோவில் ஆதி மற்றும் அர்ச்சனா இருவரும் அந்த பணத்தை திருட முயற்சி செய்கின்றனர்.