சரவணனை திட்டி தீர்த்த நடுவர்கள் கடைசியில் எடுத்த முடிவால் அர்ச்சனா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Raja Rani 2 Episode Update 30.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் சிக்கனுக்கு பதிலாக வேறு ஒரு பொருளை வைத்து சமைத்து அதனை நடுவர்கள் சாப்பிட்டு பார்த்து விட்டு அவரை பாராட்டினார். பைனலுக்கு சென்ற பிறகு சரவணன் அவர்களிடம் அது சிக்கன் இல்லை என கூறினார். இதனால் சரவணன் ஏமாற்றி விட்டதாக அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுமாறு கூறினர்.
ஆனால் மூன்று நடுவர்களில் ஒருவர் சரவணன் ஏமாற்றவில்லை அவரது திறமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என பேசினார். அதன்பிறகு நடுவர்கள் ஒன்று சேர்ந்து பேசி சரவணனை பைனலுக்கு அனுப்பினர். அடுத்த கட்டம் போட்டிக்கான அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் அறிவிக்கப்படும் என கூறிவிட்டு நடுவர்கள் கலைந்து செல்கின்றனர்.
பிறகு குடும்பத்தார் அனைவரும் சரவணனை பாராட்டுகின்றனர். சரவணன் உங்களிடம் சொல்லாமல் போட்டியில் கலந்து கொள்வதற்காக மன்னித்து விடுங்கள் என சிவாகமங்கள் மன்னிப்பு கேட்கிறார். சிவகாமி அதெல்லாம் ஒன்றுமில்லை என இந்தியாவில் என்னிடம் ஏற்கனவே சொல்லி விட்டதாக கூறுகிறார். சரவணன் அடைந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணமே சந்தியா தான் என சொல்கிறார். சந்தியா அவருடைய திறமை தான் காரணம் அவருக்கு நாம சப்போர்ட்டாக இருந்தோம் அவ்வளவுதான் என கூறுகிறார். சரவணன் பையனுக்கு போனது அர்ச்சனாவிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
அதன்பிறகு போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் அழைக்கப்பட்டு நாளைக்கு என்ன சமைக்க வேண்டும் என்பது நாளைக்கு தான் தெரியும். அதற்கான பொருட்களை நாங்களே கொடுத்து விடுவோம். உலக அளவில் பிரபலமான ஒருவர் நடுவராக வர இருப்பதாகவும் கூறுகின்றனர். என்ன சமைப்பது என்று தெரியாமல் குழம்புகின்றனர். ஷல்மா என்ன சமைக்கப் போறே சரவணன் எனக் கேட்க முடிவு செய்யல என கூறுகிறார். அர்ச்சனா சந்தியா எப்படியாவது ஜெயிக்க வைத்து விடுவா என நக்கலாக கூறுகிறார். அவரிடம் திறமை இருக்கு அதை ஜெயிக்க வைத்தே தீருவேன் என சந்தியா கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.