Raja Rani 2 Episode Update 29.10.21

சரவணனை போட்டியில் கலந்துக்க வைக்க குடும்பத்துடன் சேர்ந்து சந்தியா போடும் திட்டம் கை கொடுக்குமா?

Raja Rani 2 Episode Update 29.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கடைக்குச் சென்று சர்க்கரையை கூப்பிட்டு வந்த சந்தியா வீட்டில் அனைவருடனும் சேர்ந்து என்ன செய்யலாம் என திட்டம் போடுகிறார்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா-சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதி?

அந்தப்பக்கம் அர்ச்சனா கடையில் இருக்கும்போது பிரியாவை பெண்கேட்டு வந்து சிவகாமியிடம் விசாரித்த கையோடு நேராக கடைக்கு சென்று அர்ச்சனாவிடம் பேசுகிறார் அந்த பெண்மணி. முதலில் அனைத்தையும் கேட்ட அர்ச்சனா இதெல்லாம் எதுக்கு என்கிட்ட செல்றீங்க எனக் கேட்டதற்கு பிரியாவை பொண்ணு கேட்கலாம்னு இருக்கோம் என கூறினார். உடனே அர்ச்சனா என் தங்கச்சிக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துட்டோம் எனக் கூறி அந்தப் பெண்மணியை அனுப்பி வைக்கிறார். உடனே செந்தில் பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டீங்களா என்கிட்ட சொல்லவே இல்ல என கேட்கிறார். அதான் என் தங்கச்சிக்கு பார்த்த மாப்பிள்ளையை எல்லாரும் சேர்ந்து உன் தங்கச்சிக்கு கட்டி வைக்கப் போறீங்களே என கூறுகிறார். எங்க பாஸ்கரோட மனசு மாறி என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்க போறாருனு தான் வேறொரு இடத்தில் ப்ரியாவை தள்ளி விட்டுடணும்னு உங்க அம்மா திட்டம் போடுறாங்க என கூறுகிறார்.

இந்தப் பக்கம் சந்தியா அனைவரையும் சேர்த்து மெஷினில் மாவை பிசைந்து சப்பாத்தி மேக்கரில் சப்பாத்தி தேய்த்து எடுக்கிறார். இந்த நேரத்தில் கடையில் சரவணன் சந்தியா பேசாம போனதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். உடனே கடையில் இருந்து வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகிறார். சரவணன் குரலைக் கேட்டதும் அவரை உள்ளே வராமல் தடுக்குமாறு சர்க்கரையை அனுப்பி வைக்கிறார் சந்தியா. சர்க்கரை ஏதேதோ சொல்லி சரவணனை உள்ளே வர விடாமல் வெளியே நிற்க வைக்கிறார். பின்னாடியே வந்த சந்தியா எதுக்கு வந்தார் என கேட்டு பின்னர் சரவணன் தண்ணீர் கேட்க தண்ணீரைக் குடித்துவிட்டு கடையில் போய் வேலையைப் பார்க்கச் சொல்லு என கூறிவிட்டு உள்ளே சொல்கிறார். சரவணன் தண்ணீர் குடித்து விட்டு கடைக்கு சென்று விடுகிறார். சர்க்கரை கதவை சாத்தி விட்டு சந்தியாவிற்கு உதவி செய்கிறார். சப்பாத்தி முழுவதையும் தேய்த்து சப்பாத்தி போட தொடங்குகிறார் சந்தியா.

கணவருக்கு Diamond நகை வாங்க போய் Shamili செய்த வேலைய பாருங்க.! | Saravana Elite Diamond | Chennai

இந்த நேரத்தில் சிவகாமி கோவிலில் இருந்து வந்து வீட்டு கதவை தட்டுகிறார் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. உடனே சந்தியா மயில் தான் எல்லா உதவியையும் செய்ததா அத்தை நினைச்சுப்பாங்க என அவரை ஒளிந்து கொள்ளச் சொல்கிறார். மாமனாரை சட்டை போட்டுக்கொண்டு பிரஷ்ஷாக வந்து அமர சொல்கிறார். சர்க்கரையை கதவைத் திறந்து வைத்து அங்கேயே புத்தகத்தை வைத்து படிப்பது போல நடிக்கச் சொல்கிறார். உடனே எல்லோரும் கலைந்து போகின்றனர். இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.