சரவணன் போட்டியில் கலந்து கொள்ளும் நிலையில் அவரை சிவகாமியிடம் போட்டுக்கொடுத்த அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
Raja Rani 2 Episode Update 28.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் போட்டியாளர்கள் அடுத்த போட்டிக்காக தயாராக இருக்கின்றனர். நடுவர்களை வரவேற்ற தொகுப்பாளர் அதன்பின்னர் போட்டியாளர்களை மேடைக்கு அழைக்கிறார். சரவணன் மட்டும் இல்லாமல் இருக்கும் நிலையில் அவருக்காக கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் எனக்கூறி கவுண்டவுன் ஸ்டார்ட் செய்கிறார். ஒன்னு என முடியும் நேரத்தில் சரியாக என்ட்ரி கொடுக்கிறார் சரவணன். அதன்பிறகு சந்தியா அவரை வாழ்த்தி அனுப்பி வைக்கிறார்.
மேடைக்கு போன சரவணனிடம் மோகன் வைத்தியா கோவில் பூஜைனு சென்டிமெண்ட் கதையெல்லாம் சொன்னாங்க ஆனா போட்டியில கலந்துக்க வந்துட்டீங்க என கேட்கிறார். சரவணன் என்ன சொல்வது என தெரியாமல் நிற்க அவரே நீங்க எடுத்தது நல்ல முடிவுதான் என கூறி அமைதியாகி விடுகிறார்.
சரவணன் சமைக்க வந்ததைப் பார்த்த அர்ச்சனா அவரை சிவகாமியிடம் போட்டுக்கொடுக்க வீடியோ எடுக்கிறார். அந்த நேரத்தில் சிவகாமி வந்துவிட பாருங்க நீங்க சொன்னது எல்லாம் கேட்காமல் சந்தியா என்ன வேலை பண்ணி இருக்கா என போட்டுக் கொடுக்க சிவகாமி கொஞ்சம் அமைதியா இரு போட்டி முடிஞ்சதுக்கு அப்புறம் எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம் என கூறுகிறார். இதனால் அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார். பின்னாடியே வந்த பார்வதி என்ன போட்ட திட்டமெல்லாம் வேஸ்டா போச்சுனு ஃபீல் பண்றீங்களா? அதான் உங்க முகமே காட்டிக் கொடுக்குது என திட்டி விட்டு செல்கிறார்.
அதன்பிறகு போட்டியாளர்கள் சமைக்க தொடங்குகின்றனர். சரவணன் மில்ட்டன் வாலை சமைக்கிறார். தொகுப்பாளர் அருகே வரும்போது அதை சிக்கன் இல்லை என கண்டு பிடித்து விடுவாரோ என்ற பயம் சரவணனுக்கு வருகிறது. ஆனால் அதனை கண்டு பிடிக்கவில்லை. அதன்பிறகு மோகன் வைத்தியா வரும் போது இது என்ன டிஸ் என கேட்க சிக்கன் செங்கோட்டை என கூறுகிறார். பாசன சூப்பரா இருக்கு என பாராட்டி விட்டு செல்கிறார்.
இந்த பக்கம் சந்தியா சரவணன் ஜெயிப்பாரா மாட்டாரா? உண்மையைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பதட்டத்தோடு இருக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.