சரவணன் சொன்ன வார்த்தையால் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடு சரவணன் இதை இப்படியே விடக்கூடாது அந்த பரந்தாமன் தான் இதற்கு காரணம் என சொல்ல செந்தில் பரந்தாமனுக்கு ஆதரவாக சண்டையிட நான் கிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் நம்ம வீட்டுக்கு உடனுக்குடன் எப்படி கலப்பட எண்ணெய் வந்துச்சு என கேட்க அப்போ நீ என்னை சந்தேகப்படுறியா என செந்தில் கேட்க சரவணன் நான் அப்படி சொல்ல நம்ம வீட்டு ஆள தவிர்த்து வேறு யார் அதை கொண்டு வந்து வச்சிருக்க முடியும் என கேட்கிறார்.

உடனே அர்ச்சனா நானும் அப்போதுல இருந்து பாக்குறேன் நம்ம வீட்டு ஆளுதான் நம்ம வீட்டு ஆளுதான் அப்ப யாரு நீங்க சொல்றீங்க என அர்ச்சனா பேசி தப்பிக்க முயற்சி செய்கிறார். சரவணன் நான் இவங்க தான் அவங்க தானே யாரையும் குறிப்பிட்டு சொல்லல ஆனா நம்ம வீட்டு ஆள் யாரோ ஒருத்தர் தான் இந்த வேலையை பண்ணி இருக்கணும். தகுந்த ஆதாரத்தோடு அதை கண்டுபிடித்து அப்புறம் அத பத்தி பேசலாம் என சொல்கிறார்.

சிவகாமி நம்ம குடும்பத்துக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ என வருத்தப்பட்டு அழுகிறார். அதன் பிறகு சந்தியா சரவணனுக்கு ஃபோன் போட அப்போது நடந்த விஷயங்களை சொல்ல அவர் அழுது புலம்ப பின்னர் சரவணன் சந்தியாவை சமாதானம் செய்து இருவரும் ரொமான்டிக்காக பேசிக் கொள்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து கௌரி மேடம் உடன் பயிற்சியாளர்கள் அனைவரும் காட்டுக்குள் நுழைய அப்போது அங்கு சமூக விரோதிகள் கௌரி மேடமை கடத்த திட்டமிடுகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.