அடுத்த போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் சரவணனுக்கு சிவகாமியால் அதிர்ச்சி காத்துக் கொண்டுள்ளது.
Raja Rani 2 Episode Update 23.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சந்தியாவும் சரவணன் வெளியில் அமர்ந்து கொண்டு இருக்க சரவணன் கால் வலி போய் இருக்கிறதா எனக் கேட்க இல்லை கொஞ்சம் தூரம் நடந்து வந்ததால் வலிப்பது போல இருந்தது ஆனால் வலி இல்லை என கூறுகிறார். அதன் பிறகு அத்தை மனசுல நான் இருக்கிறது பற்றி நேற்று அவங்கள மறந்து பேசின போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது என கூறுகிறார். அவளோட மனசுல நீங்க எப்பயோ நம்பிக்கைக்குரிய ஆளா மாறி இருக்கீங்க. அவங்க தான் அதை வெளியில் காட்டாமல் இருக்காங்க என சரவணன் கூறுகிறார்.
அப்பக்கூட அத்தை மாமாவை பார்த்து நீ யாருன்னு கேட்ட போது எனக்கு சிரிப்புத் தாங்க முடியல.. பாவம் அப்ப மாமாவோட முகத்தை பார்க்கணும். அத்தை நைட்டு இந்த மாதிரி பேசினது எல்லாம் அவர்களுக்கு தெரியக்கூடாது என சொல்கிறார்.
இந்த பக்கம் சிவகாமி தன்னுடைய கணவருடன் அமர்ந்திருக்கும் போது நேற்று இரவு என்ன நடந்துச்சு எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை என கேட்கிறார். அவருடைய கணவரோ எதை எதையோ சொல்லி உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறார். இந்த நேரத்தில் ஊரிலிருந்து சிவகாமியின் கணவருடைய தம்பி போன் செய்து அம்மனுக்கு காப்பு கட்டி விட்டார்கள். அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என கூறுகின்றனர். சிவகாமி நிச்சயம் நாம அப்படித்தான் இருக்கணும். ஆனா இங்க அசைவ உணவு சாப்பிடக் கொடுத்தால் இல்ல சமைக்க கொடுத்தால் என்ன செய்வது என புலம்பிக் கொண்டிருக்கிறார். அதெல்லாம் கண்டிப்பாக சைவ உணவு இருக்கும் என சிவகாமியின் கணவர் ரவி கூறுகிறார்.
இந்த பக்கம் சந்தியாவும் சரவணனும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க சரவணன் சந்தியாவிடம் ஐ லவ் யூ சொல்லுமாறு ரொமான்டிக்காக பேசி கேட்டுக்கொண்டிருக்கிறார். சந்தியாவும் ஐ லவ் யூ என சொல்ல முயற்சிக்கும் போது அவருக்கு போட்டி நடத்தும் குழுவினரிடம் இருந்து ஒரு போன் வருகிறது. நாளைக்கான போட்டிக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக கூறி ஒரு இடத்திற்கு வரச் சொல்கின்றனர். பிறகு சந்தியா உடனே வர சொல்றாங்க வாங்க நம்ப போகலாம் என அவரைக் கூட்டிச் சென்று விடுகிறார்.
அதற்கு அடுத்ததாக அங்கு சென்றபோது இன்னைக்கு போட்டி எதுவும் இல்லை ஆனா நாளைக்கு போட்டி இருக்கு. இந்த போட்டியில் நாளைக்கு வெஜிடேரியன் இல்லை அசைவம் மட்டும் தான் சமைக்கனும். அதுவும் சிக்கன் மட்டும் தான் சமைக்க வேண்டும். சிக்கனை கூட நீங்களே வாங்கிக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். சரவணனுக்கு ஒரே மகிழ்ச்சி. சிக்கனை ஈசியாக செய்து விடலாம் என அவர் உற்சாகத்தில் இருக்கிறார். ஆனால் அசைவத்தை சமைக்கவோ சாப்பிடவோ கூடாது என சிவகாமி சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.