சரவணன் மீது சீலிங் ஃபேன் அறுந்து விழ சிவகாமி அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
Raja Rani 2 Episode Update 18.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் ஒருவழியாக பார்வதி பிரச்சினை சுமூகமாக முடிந்துவிட்டது பாஸ்கர் இவ்வளவு எளிதில் புரிந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை என சரவணன் பேசிக்கொண்டிருக்க இதே மாதிரி நான் போலீஸ் ஏட்டு படிப்பு விஷயத்தையும் அத்தையிடம் சொல்லிவிடலாம் என கூறுகிறார். சரவணன் அதுக்குன்னு ஒரு நேரம் வரும் அப்போது கண்டிப்பா சொல்லி விடுகிறேன் என கூறி சந்தியாவை அழைத்து சென்று டேபிள் அருகே உட்கார வைத்து இப்போது படியுங்கள் என அவரை படிங்க வைக்கிறார். பிறகு சரவணன் கட்டிலில் அமர்ந்து கொண்டிருக்கும் போது சீலிங் ஃபேன் திடீரென அறுந்து அவர் மீது விழுகிறது. இதனால் சரவணனுக்கு கையில் அடிபட்டு விடுகிறது.
உடனே சந்தியா பதறி போய் சத்தம் போட எல்லோரும் உள்ளே வந்து சரவணனுக்கு முதலுதவி செய்து அவரை வெளியே படுத்து தூங்க சொல்கிறார் சிவகாமி. பிறகு சிவகாமி கடவுளிடம் என் பையனுக்கு நீதான் துணையாக இருக்கனும் என வேண்டிக் கொண்டு இருக்கும் போது அங்கே அர்ச்சனா வந்து சரவணனுக்கு மட்டும் அடிபட்டு இருக்கு, சந்தியாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதிலிருந்து என்ன தெரியுது சந்தியா சரவணனை நெருங்க விடுவதில்லை. தனித்தனியாகத் தான் வாழ்கின்றனர் என்று கொளுத்திப் போட சில காலமே அர்ச்சனா சொல்வது சரிதான் என முடிவு செய்கிறார்.
பிறகு கணவரிடம் இதுபற்றி பேச அவர் இதில் நாம தலையிட வேண்டாம் என கூறுகிறார். ஆனா அதை கேட்காத சிவகாமி நாளை வேற இது வேற சிவகாமியை பார்ப்பீங்க கூடிய சீக்கிரம் அவள் குழந்தை பெற்றுக் கொள் ளும் அதுதான் என்னுடைய விருப்பம் என சொல்லிவிட்டு படிக்கிறார்.
மறுநாள் காலையில் சந்தியா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க அப்போது சிவகாமி அவரை அழைத்து கோவிலுக்குப் போகணும் ரெடி ஆகிட்டு வா என கூறுகிறார். போய்ட்டு 108 விளக்கு போடணும் அப்பதான் சீக்கிரம் குழந்தை பிறக்கும் என செல்கிறார். இதனால் சந்தியாவுக்கு போகணும் அத்தையுடன் கோவிலுக்கு எப்படி இதை அவரிடம் சொல்லி விடலாம் என யோசிக்கிறார்.
சிவகாமியின் கணவர் இதெல்லாம் எதுக்கு அவங்க மனசுல என்ன இருக்குன்னு முதல்ல நாம தெரிஞ்சுக்கணும் என சொல்லியும் சிவகாமி நீங்க கொஞ்சம் வாயை மூடிட்டு போங்க என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என கூறுகிறார். இந்த பக்கம் சந்தியா என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தோடு அமர்ந்து கொண்டு இருக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.