சந்தியா கொடுத்த அதிர்ச்சியால் சரவணனின் கை சரியாகி விட்டது.

Raja Rani 2 Episode Update 16.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் வெளியில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சந்தியா அங்கு வந்து அவருக்கு காபி கொடுக்கிறார். கையால் வாங்கி குடிக்க கஷ்டப்படும் சரவணனுக்கு அவரே ஊட்டி விடுகிறார். இவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதை கண்டுபிடித்த சந்தியா இதில் இறுதி வரை நிச்சயம் மீட்டு கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி ஒரு வாழ்க்கையே சீரழிந்து விடும் என யோசிக்கிறார்.

என்ன செய்யலாம் என யோசித்த சந்தியா அப்படியே பின்னாடியே நடந்து சென்று நீச்சல் குளத்தில் தவறி விழுவது போல விழுகிறார். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் சரவணன் தன்னுடைய கை செயல்படாது என்பதை மறந்து நீச்சல் குளத்தில் குதித்து சந்தியாவை காப்பாற்றுகிறார். அப்போது அவரது கை சரியாகி விட்டது எண்ணி இருவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த விஷயத்தை எடுத்துக் கூறி சரவணனுக்கு வெற்றி தோல்வி என்பது சகஜம் என்பதை புரிய வைத்து போட்டியில் கலந்து கொள்ள சரி என சொல்ல வைக்கிறார்.

இந்த நேரத்தில் அங்கு வந்த குடும்பத்தார் சரவணனின் கை செயல்படுவதை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். அதன்பிறகு சந்தியா போட்டியில் கலந்து கொள்வது பற்றி பேச முயற்சி செய்ய அர்ச்சனாவும் ஆதியும் இனி போட்டியே தேவையில்லை வீட்டிற்கு கிளம்பலாம் என கூறுகின்றனர். ஆனால் சிவகாமி அமைந்த போட்டியில் கண்டிப்பாக கலந்து கொள்ளட்டும் என கூறுகிறார். சரவணன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து நானும் அதைத்தான் சொல்லலாம் என நினைத்தேன் என கூறுகிறார்.

பிறகு அன்று இரவு தன்னுடைய அப்பா அம்மாவிற்கு திருமணநாள் என்பதால் யாருக்கும் தெரியாமல் கேக் வாங்கி வந்து அனைவரையும் எழுப்பி சர்ப்ரைஸ் கொடுக்கிறார் சரவணன். பிறகு சரவணனின் அப்பா இந்த போட்டியில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை அசால்ட்டாக எதிர்கொண்டு கடைசி வரை சென்று ஒரு கை பார்த்துவிட வேண்டும் என கூறுகிறார். சரவணன் நான் வெற்றி தோல்வி சகஜம் என்பதைப் புரிந்து கொண்டேன் கண்டிப்பாக கடைசி வரை இந்த போட்டியில் கலந்து கொள்வேன் என வாக்கு கொடுக்கிறார்.

அதன்பிறகு சக போட்டியாளர்கள் இருவர் வந்து சரவணன் உடல்நிலை குறித்து விசாரிக்கின்றனர். இந்த போட்டியில் ஒரு கை பார்த்து விடலாம் என சரவணன் சொல்ல இந்த நம்பிக்கைதான் உங்களை ஜெயிக்க வைக்கும் என அவர்கள் கூறுகின்றனர். அதன் பிறகு அனைவரும் அங்கிருந்து கிளம்ப அர்ச்சனா மட்டும் ஷல்மாவிடம் சென்று இந்த போட்டிக்கு சரவணனை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என கூறுகிறார். எனக்கு சரவணன் தோற்பதை விட சரவணன் தோற்று சந்தியா தலை குனிவது தான் வேண்டும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.