ஆதியை திருடன் என அசிங்கப்படுத்தி உள்ளார் அர்ச்சனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சிவகாமி வருத்தமாக இருக்க வீட்டுக்கு வரும் சரவணன் ஆதி மற்றும் செந்திலை திட்டி தீர்க்கிறார். எல்லாரையும் அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்க முதலில் அர்ச்சனா முந்திக்கொண்டு மன்னிப்பு கேட்டு கடையை நாம எடுத்துக் கொள்ளலாம் என மன்னிப்பு கேட்க பிறகு செந்திலும் மன்னிப்பு கேட்கிறார்.

அதன் பிறகு ஜெஸ்ஸி மன்னிப்பு கேட்க ஆதி பார்மாலிட்டிக்கு மன்னிப்பு கேட்கிறார். பிறகு இந்த கடை யாருக்கு என அர்ச்சனா மீண்டும் பேச்சை கிளப்ப சிவகாமி இந்த கடை ஜெசிக்கு தான் என சொல்ல அர்ச்சனா திருட்டு பையன் கிட்ட கதையை கொடுக்கறீங்க அவன் எப்படி கடைய நடத்துவான் ஏதாவது திருடி கிட்ட தான் ஓடுவான் என சொல்ல ஜெசி என்ன என் புருஷன் திருடன் திருடன் என்று சொல்றீங்க அப்படி என்ன திருடிட்டு போனான் எனக்கிட்ட எல்லோரும் தடுத்து நிறுத்தியும் அர்ச்சனா 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடி விஷயத்தை போட்டு உடைக்க ஜெசி அதிர்ச்சி அடைகிறார்.

இது உண்மையா என கேட்க எல்லோரும் அமைதியாகவே இருக்க ஜெசி உண்மைதான் என்பதை புரிந்து கொண்டு கோபமாக உள்ளே சென்றுவிட ஆதி சமாதானம் செய்ய போய் பேச முயற்சி செய்ய ஜெசி கோபப்படுகிறார். அந்த நெக்லஸ இந்த பணத்திலிருந்து தான் வாங்கினியா என சொல்ல ஆதி ஆமாம் என சொல்ல இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்ததாக சரவணன் சந்தியாவுக்கு போன் போட சந்தியா போனை எடுக்காமல் தூக்கத்திலேயே இருக்க அதன் பிறகு சேட்டா மற்றும் கதவைத் தட்ட அப்போது கதவை திறக்காமல் இருக்கின்றார். இதனால் இருவரும் பதற்றம் அடைகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.