சாமியாரை எதிர்க்கும் சந்தியாவிற்கு சிவகாமி செக் வைக்க சரவணன் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா சாமியாரை எதிர்த்ததின் காரணமாக ஏற்றி வைத்த மூன்று விளக்கில் ஒரு விளக்கை அணைக்கிறார். இதனால் சந்தியா தேம்பி அழ அர்ச்சனா அவரை நக்கல் அடித்து விட்டு செல்கிறார். அதன் பிறகு சந்தியா ஒரே இடத்தில் அமர்ந்து அழுது கொண்டிருக்க அங்கு வந்த சரவணன் இது எல்லாம் நாம எதிர்பார்த்ததுதானே இன்னைக்கு நம்பள தப்பா நினைக்கிற எல்லோரும் நாளைக்கு சாமியாரோட உண்மையான முகம் தெரிந்தது புரிஞ்சிப்பாங்க. ஆதாரங்களை சேகரிக்க வேண்டும் என ஆறுதல் கூறுகிறார்.

அதன் பிறகு சிவகாமியுடன் அவருடைய கணவர் ரவி சந்தியா சரவணன் பக்கம் ஏதோ நியாயம் இருக்க வாய்ப்பு இருக்கிறது என பேச அதை ஏற்றுக் கொள்ளவில்லை. செந்திலிடம் சரவணன் இது பற்றி பேசும் முயற்சி செய்து செந்தில் சந்தியா நீ எப்போதும் தனி ரூட்டில் போவாங்க அவங்க பின்னாடி போகிறது நிறுத்து. அவங்களுக்கு எடுத்து சொல்லி புரியவை அம்மா இப்படி இருந்து நான் பார்த்தது கிடையாது அவங்களை கஷ்டப்படுத்தாத என கூறுகிறார். மறுநாள் காலையில் சிவகாமி யோசனையில் இருக்க அங்கு வந்த ரவி மீண்டும் இது பற்றி பேச அவர் உடனே சந்தியா சரவணன் இந்த கேசை வாபஸ் வாங்க வேண்டும் கூப்பிடுங்க என சத்தம் போட அவர் சந்தியா சரவணனை கூப்பிட செல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.