அடிக்கல் நாட்டு விழாவை சந்தியா தடுக்க சிவகாமி அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லாரும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இப்பவே தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள் என்னங்க பண்றது என சரவணன் கேட்க எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணியாச்சு என சந்தியா கூறுகிறார். பக்தி என்ற விஷயத்தை கையில் எடுத்து அந்த சாமியார் அதனால சட்ட ரீதியா அணுகலாம்னு கோர்ட்டுக்கு லெட்டர் எழுதி இருக்கேன் என கூறுகிறார்.
மறுநாள் காலையில் அடிக்கல் நாட்டு விழாவில் சாமி தங்களை எடுத்துக் கொடுத்து சிவகாமியை அடிக்கல் நாட்ட சொல்ல அந்த நேரத்தில் போலீஸ் ஆர்டருடன் வந்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த யார் புகார் கொடுத்தது என சாமியார் கேட்க நான் தான் என சந்தியா என்ட்ரி கொடுக்க சிவகாமி அவரை திட்டி தீர்க்கிறார். சாமியார் கோவில் விசேஷத்தில் தலையிட்டு மிகப்பெரிய பாவம் பண்ணிட்ட. இது உன்னை மட்டும் இல்ல உன் குடும்பத்தையே அழிக்கும் என சாபம் விட சிவகாமி பதறுகிறார். பிறகு சந்தியாவிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி சாமி அழைத்துச் சென்று உயிரோட இருக்க முடியாது என மிரட்டல் விடுகிறார். பிறகு சரவணன் என்னங்க இப்படி மிரட்டுறான் என சொல்ல அவனை பல மடங்கு துணிச்சலோடு எதிர்த்து நிற்க வேண்டும் என சந்தியா கூறுகிறார்.
வீட்டுக்கு வந்த சிவகாமி சந்தியாவை தரதரவென இழுத்து வந்து உன்னால இந்த குடும்ப மானமே போச்சு, நீ அந்த சாமியார் மட்டும் அசிங்கப்படுத்தல என்னையும் தான் அசிங்கப்படுத்தி இருக்க. நீ பண்ற ஒவ்வொரு விஷயமும் இந்த குடும்பத்தால்தான் பாதிக்கும் என்று உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது. நீ செஞ்ச தப்புக்கு இந்த மூணு விளக்கில் ஒரு விளக்கை நான் அணைக்க போகிறேன் என சொல்லி விளக்கை அணைத்து அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.