கடையால் குடும்பத்துக்குள் வந்த பிரச்சனையால் ஆதியின் திருட்டு வேலையை போட்டு உடைத்துள்ளார் அர்ச்சனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி ஜெசி சிவகாமி ரவி மற்றும் சரவணன் என ஐந்து பேரும் பியூட்டி பார்லர் கடைக்காக ஓனரை பார்த்து பேச சென்றுள்ளனர். மாதம் 15 ஆயிரம் ரூபாய் வாடகை அட்வான்ஸ் 3 லட்சம் ரூபாய் என சொல்ல சரவணன் அட்வான்ஸ் அதிகமாக இருக்கிறது கொஞ்சம் குறைக்குமாறு பேசிக் கொண்டிருக்க ஓனர் ஏற்கனவே குறைத்து தான் சொல்லி இருப்பதாக பேசிக் கொண்டிருக்க இருவருக்கும் இடையே பேரம் நடக்கிறது.

இந்த நேரத்தில் செந்தில் மற்றும் அர்ச்சனா என இருவரும் அவர்களது கடையை விரிவு படுத்துவதற்காக இந்த கடையை எடுக்க வந்துள்ளனர். இவன் வெளியே உட்கார வைத்து உள்ளே ஒரு பார்ட்டி பேசிக்கிட்டு இருக்காங்க வெயிட் பண்ணுங்க என சொல்ல வாடகை எவ்வளவு எண்ணெய் எது எனக்கு விசாரிக்க வாடகை 15000 ரூபாய் அட்வான்ஸ் 3 லட்சத்து 20 ஆயிரம் என சொல்ல எங்களுக்கு ஓகே தான் என கூறுகின்றனர்.

அதற்குள் உள்ளே ஆதி எங்களுக்கு கடை பிடிச்சிருக்கு ஓகே தான் என சொல்லி 50000 டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்ட் போடுகிறார். வெளியே பியூன் நீங்க போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வாங்க என சொல்லி அனுப்ப கிளம்பி செல்லும் அர்ச்சனா பால் பாட்டில் மறந்து வைத்துவிட்டதாக சொல்லி திரும்ப வருகிறார்.

பிறகு அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள பிறகு அர்ச்சனா இந்த கடை எங்களுக்கு தான் வேண்டும் என அடம்பிடிக்க ஜெசி எங்களுக்கு தான் வேணும் நாங்க டோக்கன் அட்வான்ஸ் கொடுத்திருக்கும் என ஆரம்பிக்க ஆதி செந்தில் இடையே கைகலப்பு நடக்கிறது. பிறகு சிவகாமி இருவரையும் திட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் வீட்டில் நடந்த பிரச்சனையில் ஆதி வீட்டில் 5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய விஷயத்தை அர்ச்சனா போட்டு உடைக்க ஜெஸ்ஸி அதிர்ச்சி அடைகிறாள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.