இரண்டாவது ரவுண்டில் சரவணன் டேஞ்சர் zoneக்கு சென்றது சிவகாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Raja Rani 2 Episode Update 10.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. முதல் ரவுண்டில் சரவணன் இண்டக்சன் ஸ்டவ் ஒயர் கட் செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது ரவுண்டில் தொகுப்பாளர் விதிமுறைகளை ஆங்கிலத்தில் சொல்ல சந்தியா வாக்குவாதம் செய்து தமிழில் சொல்ல வைத்தார்.
ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அதன்பிறகு போட்டியாளர்களுக்கு போட்டி தொடங்கியது. அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு உணவை சாப்பிட்டு அதில் உள்ள 18 பொருட்களின் பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும். அதன்படி அனைவரும் அதில் உள்ள பொருட்களை எழுதி பக்கத்தில் வைத்திருந்த பாட்டிலில் போடுகின்றனர். டைம் முடியும் வரை எழுதிக் கொண்டிருந்த சரவணன் இறுதியாக தான் எழுதிய சீட்டை போட்டு விட்டு மேடைக்கு வருகிறார்.
நடுவர்கள் ஒவ்வொருவரின் சீட்டாக எடுத்து யார் எத்தனை பொருட்களை எழுதி உள்ளார்கள் என்பதை பார்க்கின்றனர். கடைசியாக சரவணனின் சீட்டை எடுக்கின்றனர். அதில் அவர் 14 பொருட்களை சரியாக எழுதி இருந்தார். அதன் பிறகு இந்த போட்டியாளர்களில் 5 பேர் அடுத்த ரவுண்டுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சரவணன் டேஞ்சர் சோனுக்கு செல்கிறார். டேஞ்சர் சோனில் உள்ள ஐந்து பேருக்கு மீண்டும் ஒரு போட்டி நடத்தப்பட்டு அதில் இருந்து மூன்று பேர் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என அறிவிக்கின்றனர்.
இந்தப் பக்கம் சிவகாமி சரவணன் இரண்டாவது ரவுண்டில் டேஞ்சர் சோனுக்கு சென்றதைப் பார்த்து கண்ணீர் வடிக்கிறார். இன்னும் அவன் எவ்வளவு தான் அசிங்கப்பட போறானோ? அவன் மனசு என்ன பாடு படுமோ எனக்கு மட்டும்தான் தெரியும் எனக்கு புலம்பிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பக்கத்து வீட்டார் வந்து சரவணனுக்கு இது எல்லாம் தேவையா? ஒரு ஜிலேபியை கூட சரியா செய்ய தெரியவில்லை. சரி சாப்பிட்டு அதுல இருக்கற யாராவது எழுதி இருக்கலாம் அதுவும் சரியா செய்யல. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு எதுக்கு இந்த வேலை? இருக்கிற பெயரை கெடுக்க போறான் என கிண்டல் அடிக்கின்றனர். சிவகாமி அவர்களை திட்டி அனுப்புகிறார். எல்லாம் சந்தியாவால வந்தது என கோபப்படுகிறார் சிவகாமி.
எல்லாரும் வாழ்ந்து இருக்காங்க – Jail Movie Exclusive Celebrity Show | G.V.Prakash, Abarnathy
இந்தப் பக்கம் விளையாடியது போதும் இதோட மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு வீட்டுக்கு போய்விடலாம் என ஆதியும் அர்ச்சனாவும் கூறுகின்றனர். சந்தியா ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ கடைசி வரைக்கும் போராடணும் என சொல்கிறார். சரவணன் அப்பா, செந்தில், பார்வதி என அனைவரும் சரவணனுக்கு ஆறுதல் கூறுகின்றனர். முதல்ல இன்டக்ஷன் ஸ்டவ் ஒயரை கட் செய்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதிலிருந்துதான் இவர் இப்படி இருக்காரு என சந்தியா நினைக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.