சரவணனால் போட்டியில் பிரச்சினை வெடிக்க நடுவர்கள் எடுத்துள்ள முடிவு போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Raja Rani 2 Episode Update 10.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் சந்தியா ஆட்டோவில போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அதற்குள் போட்டியாளர்கள் ஒருவருக்காக எப்படி காத்திருக்க முடியும் என ஒரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் காத்திருக்க தயார் எனவும் கூறுகின்றனர். சரவணனுக்காக 5 நிமிடம் காத்திருக்கலாம் என நடுவர்கள் முடிவு செய்கின்றனர். இந்த நேரத்தில் சரவணன் வந்துவிட ஏன் லேட் என கேட்க வரும் வழியில் ஒரு விபத்து என சொல்ல இந்த மாதிரி எல்லாம் காரணம் சொல்லாதீங்க என கூறுகின்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று கொடியேற்றம்; மற்றும் விழா நிகழ்ச்சிகள்..

இந்த பக்க சிவகாமி சரவணன் நல்லபடியாக திரும்பி வரணும். அவன் ஜெயிக்கிறான், தோற்கிறான் அதெல்லாம் முக்கியமல்ல, அவன் மனசு கஷ்டப்பட கூடாது என வேண்டுகிறார். வழக்கம் போல ஆதி சரவணனை கிண்டலடிக்க பார்வதி ஆதிக்கு பதிலடி கொடுக்கிறார். சிவகாமி என் பையன் இந்த குடும்பத்துக்காக எப்போ கரண்டி எடுத்தானோ அப்பவே ஜெயிச்சிட்டான் என சொல்கிறார். அவன் இந்த போட்டியில் ஜெயித்து விட்டு வந்து இவனுக்கு பதில் சொல்லுவான் என சிவகாமி கூறுகிறார்.

ஒரே அடிதான் உனக்கு.., Anchor-ஆல் கடுப்பான KPY Dheena..! | Velavan Stores | Fun Shopping | T Nagar HD

இந்த பக்கம் சரவணன் கேரட் பாயாசம் செய்து கொண்டிருக்கிறார். தொகுப்பாளர்கள் அதனை டேஸ்ட் செய்து வேற லெவல் என புகழ்கின்றனர். பிறகு கொடுத்த நேரம் முடிய போட்டியாளர்கள் அனைவரும் ஒரு கண்ணாடி அறைக்குள் அனுப்பப்படுகின்றனர். அந்த ஓட்டலுக்கு வந்த வாடிக்கையாளர்கள் இந்த உணவுகளை டேஸ்ட் செய்து பணத்தை பக்கத்தில் இருக்கும் பெட்டியில் போடுவார்கள். அதிக பணம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் அடுத்த ரவுண்ட்டுக்கு செல்வார்கள் என கூறுகின்றனர். பிறகு சிறப்பு விருந்தினராக செஃப் தாமு அழைக்கபடுகிறார். அவரும் உணவுகளை டேஸ்ட் செய்து அதற்கேற்ப பணத்தை போடுகிறார்.

வீட்டில் சிவகாமி சரவணன் ஃபோன் காலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். எல்லோரும் ஏதேதோ பேச சிவகாமி வாயை திறக்காமல் இருக்கிறார். இந்த சமயத்தில் ஆதி போன் கால் வராது. அண்ணன் மண்ணை கவ்விட்டு வீட்டுக்கு வருவார் என சொல்ல சிவகாமி திட்டுகிறார். ரூமில் அர்ச்சனா மற்றும் செந்தில் ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். செந்தில் வீடே சரவணனுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டா பிரிஞ்சி கிடக்கு என சொல்ல நானும் ஆதியும் தான் உங்க அண்ணா தோற்பாருனு சொல்லிட்டு இருக்கோம் என சொல்ல உங்க டீம் தான் ரொம்ப பலவீனமா இருக்கு என சொல்கிறார் செந்தில். இது ஒன்னும் உள்ளூர் போட்டி இல்ல, உலக லெவல் போட்டி.. உங்க அண்ணன் தோற்று போய் தான் வருவார் என சொல்கிறார் அர்ச்சனா.

போட்டியாளர்கள் சமைத்த உணவை வாடிக்கையாளர்கள் டேஸ்ட் செய்த பிறகு போட்டியாளர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு யார் யாருக்கு எவ்வளவு பணம் கிடைத்துள்ளது என எண்ணப்படுகிறது. இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் அப்டேட்.