முதல் சுற்றில் ஜெயித்த சரணனுக்கு நடுவர்கள் எதிர்பாராத ஷாக் கொடுத்துள்ளனர்.
Raja Rani 2 Episode Update 08.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகு வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் இந்நேரம் போட்டியில் கலந்துக்கிட்டு இருப்பான்ல, அவன் ஜெயிக்கிறான் தோற்கிறான் அதெல்லாம் முக்கியமில்லை, அவன் மனசு கஷ்டப்படாமல் வீட்டுக்கு வரணும் என சிவகாமி சொல்ல அவருடைய கணவர் இப்படியெல்லாம் யோசிச்சா நாம அடுத்த அடியே எடுத்து வைக்க முடியாது என சொல்கிறார். இந்த நேரத்தில் மயிலு தன்னுடைய ஊர்காரருக்கு இவர் தான் பெரிய ஐயா, பெரிய அம்மா என கூறுகிறார்.
பிறகு மயிலு இவர் பேர் செல்வம், எங்க ஊரு காரர். சின்ன வயசுல இருந்தே ப்ரண்ட்ஸ். வேலையில்லாமல் இந்த ஊருக்கு வந்திருக்கார். நம்ம கடையில் ஏதாச்சும் வேலை இருந்தா குடுங்கமா என கேட்கிறார். சிவகாமி அந்த பையனிடம் என்ன வேலையெல்லாம் தெரியும் என கேட்கிறார். அந்த பையனும் சம்பளம் எல்லாம் எதிர்பார்க்கல முதல்ல வேலைய காத்துக்கிறேன் என கூற சிவகாமி வேலையில் சேர்ந்துக்கோ என சொல்கிறார். பிறகு மயிலிடம் கடைக்கு கூட்டிட்டு போய் விட்டுட்டு என்னென்ன வேலையிருக்குனு சொல்லி விட்டுட்டு வா என சொல்கிறார் சிவகாமி.
ரயில் பயணிகளுக்கு, மீண்டும் சலுகைகள் வழங்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
இந்த பக்கம் போட்டியில் அனைவரின் உணவுகளை சுவைத்த நடுவர்கள் முடிவை சொல்ல 10 நிமிடம் ஆகும் என சொல்கின்றனர். இந்த நேரத்தில் சரவணன் நடந்த விசயத்தை சந்தியாவிடம் கூறுகிறார். சரவணன் தேர்வாகுவாரோ இல்லையோ என தெரியாமல் தவிக்கின்றனர். சரவணன் உங்க நல்ல மனசுக்கு பரிசு கொடுத்தா நல்லா இருக்கும் என சந்தியா சொல்கிறார். சரவணன் நம்ம தென்காசில இருந்து வந்ததே ஒரு உயிரை காப்பாத்த தானோ என்னவோ என சரவணன் சொல்கிறார்.
பிறகு சந்தியா உங்கள தேர்வு செய்யாமல் வீட்டுக்கு போக சொல்லிடுவாங்களோனு உங்களுக்கு வருத்தமாவே இல்லையா என சந்தியா கேட்க நாம வருத்தப்பட்டு என்ன ஆக போகுதுங்க என சொல்கிறார். விடுங்க பார்த்துக்கலாம் என சொல்கிறார் சரவணன். பிறகு முதல் சுற்றில் தேர்வான 15 பேரை நடுவர்கள் அறிவிக்கின்றனர்.
இந்த 15 பேரில் சரவணன் பெயர் அறிவிக்கப்பட்டது இருவருக்கும் இன்ப அதிர்ச்சி தான். இருவரும் மகிழ்ந்து கொள்கின்றனர். சந்தியா சரவணனை ஊக்கப்படுத்துகிறார். உதவி கேட்டு வந்த அந்த நபரை நாங்க தான் தயார் செய்திருந்தனர் என தெரிய வருகிறது. நடுவர்கள் சரவணன் மனதை பாராட்டுகின்றனர். நீங்க சமைத்த அந்த ரெண்டு டிஸ்சுமே செம சூப்பர் என பாராட்டுகின்றனர். சந்தியா சரவணனை நீங்க ஜெயிச்சிடீங்க என ஊக்கப்படுத்துகிறார். நாளைக்கு இரண்டாவது சுற்று நடக்க போகுது. 3 மணி நேரத்தில் நீங்க சமைக்கணும் என சொல்கின்றனர்.
Annaatthe படம் பார்க்க குடும்பத்தோடு வந்த சிறுத்தை சிவா – வைரலாகும் வீடியோ| Rajini , Nayanthara
பிறகு சிவகாமிக்கு போன் செய்து முத்த ரவுண்டில் ஜெயித்தது குறித்து சொல்லலாம் என சொல்கின்றனர். இந்த சிவகாமி வருத்தத்தோடு அமர்ந்து கொண்டிருக்கிறார். அர்ச்சனா சமையல் பற்றி கேட்க அவரிடம் எரிந்து விழுகிறார் சிவகாமி. இந்த நேரத்தில் சரவணன் அப்பா வந்து அர்ச்சனாவிடம் என்னாச்சு என கேட்க சிவகாமி என் பிள்ளை இல்லாமல் இந்த வீடு வீடாவே இல்லை என சொல்கிறார். அனைவரும் வீட்டில் ஒன்று சேர்ந்து விட சரவணனிடம் பேசினால் நல்லா இருக்கும் என சொல்ல ஆதி வழக்கம் போல் சந்தியாவை குறை செயல்ல தொடங்கி விடுகிறார்.
இந்த நேரத்தில் போன் வர சிவகாமி எடுக்க சந்தியா போட்டியில் முதல் ரவுண்டில் ஜெயித்து விட்டதாக கூறுகிறார். வீட்டில் இதை கேட்டதும் அனைவரும் உற்சாகமடைகின்றனர். பிறகு சந்தியா அடுத்த ரவுண்டு நாளைக்கு என சொல்கிறார். அர்ச்சனா, ஆதி வழக்கம் போல கிண்டல் அடிக்கின்றனர்.
பிறகு சரவணன் அம்மாவிடம் பேசுகிறார். சிவகாமி உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதா தான் நடக்கும் என சொல்கிறார். பிறகு அவரது அப்பா, பார்வதி, செந்தில், அர்ச்சனா, மயிலு என வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சரவணனுக்கு வாழ்த்து கூறுகின்றனர்.
பிறகு சிவகாமி சந்தியாவிடம் சரவணனை நல்லபடியா பார்த்துக்க என சொல்கிறார். அவன் என் சரவணன்னா வந்தா போதும் என சிவாகாமி கூறுகிறார். பிறகு சிவகாமி என் புள்ளைய நேர்ல பார்த்தா தான் என மனசு முழுசா சரியாகும் என சிவகாமி கூற இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 எபிசொட்.